உலக காவல் துறை போட்டியில் பதக்கம் வென்ற எஸ்.பி.மயில்வாகனனுக்கு பாராட்டு.
Mayilvaganan Police-நெதர்லாந்தில் நடந்து வரும் உலக காவல் துறை போட்டியில் பதக்கம் வென்ற எஸ்.பி.மயில்வாகனனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mayilvaganan Police-நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் உலக காவல் விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி. மயில்வாகனன் நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும், சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி 5000 மீட்டர் வேக நடை போட்டியில் தங்க பதக்கமும், மதுரை மாவட்ட ஆயுதப்படை தலைமைக் காவலர் சந்துரு நீளம் தாண்டுதல் போட்டியில் தங்க பதக்கமும் வென்றனர். பதக்கம் வென்ற காவல்துறையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டினார்.
திருச்சி மாவட்ட தடகள சங்கத்தின் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் ஆக பதவி வகித்து வரும் மயில்வாகனன் பதக்கம் வென்றமைக்காக திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2