திருப்பதி ஏழுமலையானுக்கு திருமண பத்திரிக்கை அனுப்புங்க..!

இனி உங்கள் திருமண பத்திரிக்கையை திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பலாம்.

Update: 2024-07-06 05:22 GMT
திருப்பதி வெங்கடேஸ்வரர்  ஸ்வாமி கோயில் 

ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டம், திருப்பதியில் உள்ள மலை நகரமாக திருமலை இருக்கின்றது, விஷ்ணுவின் அவதாரமாக ஸ்ரீ வெங்கடேஸ்வரர் இந்த கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார், கலியுகத்தின் சோதனைகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து மனிதர்களை காப்பாற்றுவதற்காக தோன்றியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றது.

வெங்கடேஸ்வரருக்கு பத்திரிகை அனுப்புங்கள் 

திருமணம் நிச்சயமாகி, கல்யாண பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கெல்லாம் கொடுக்கத்  துவங்கும் முன், திருமணத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே திருப்பதி கோயிலுக்கு அனுப்பி வைத்து, ஏழுமலையானின் ஆசிர்வாதத்தை பெறும் புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அப்படி பத்திரிக்கை அனுப்பும் பட்சத்தில் கோவிலில் இருந்து பிரசாதம் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன் புதுமண தம்பதிகள், திருமணத்தின் போது கையில் கட்டிக் கொள்ளும் கங்கணம், குங்குமம் மஞ்சள் அனுப்பி வைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் திருமண முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு புத்தகமும் அனுப்பி வைக்கப்படும்.

நமக்கு கல்யாண பத்திரிக்கையை சுவாமிக்கு சமர்ப்பித்த நிம்மதியும் திருப்பதி கோயிலில் இருந்து பிரசாதம் கிடைத்த மாதிரியும் ஆகிவிடும். .

திருமண பத்திரிக்கையை அனுப்ப வேண்டிய முகவரி

To

Sri Lord Venkateswara swamy,

The Executive Officer

TTD Administrative Building

K.T.Road

Tags:    

Similar News