உங்கள் ராசிக்கு என்ன கல் அணிகலன் அணியவேண்டும்..? பார்ப்போமா..?

Rasikal in Tamil-ராசிக்கல் என்ன மாதிரியான மாற்றங்களை வாழ்க்கையில் உருவாக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.

Update: 2022-08-15 07:03 GMT

Rasikal in Tamil

Rasikal in Tamil-பிறந்த நேரத்தின் அடிபப்டையில் உருவாக்கப்படும் ராசிக்காரர்களுக்கு தனித்தனி குணாதிசயங்கள் உள்ளன. அந்த குணங்களுக்கு ஏற்ப ராசிக்கல் அணிவது அவர்களுக்கு ஒரு நேர்மறை அதிர்வலைகளை ஏற்படுத்தி நம்பிக்கையை உருவாக்குகிறது. அதன்படி எந்த ராசிக்காரர் என்ன ராசிக்கல் அணியவேண்டும் என்பதைப் பாப்போம் வாங்க.

மேஷம் :

மேஷ ராசிக்காரர்கள் பவளம் ராசிக்கல் அணியவேண்டும். மேலும் செவ்வாய் திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம் . இதை அணிந்தால் தெய்வ ஆசி கிடைக்கும். நம் கோபத்தைக் குறைத்து மனநிம்மதியைத் தரும். பல்வேறு அதிர்ஷ்டங்களைத் தரும். நல்லறிவையும், துணிவையும் கொடுக்கும். தீய சிந்தனைகளை நம் மனதுக்குள் அனுமதிக்காது. நமக்கு தைரியத்தை கொடுக்கும். புதிய தொழில் செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் அணியவேண்டியது வைரம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம். இதை அணிந்தால் நல்ல மகிழ்ச்சி கிட்டும். வசீகரமான தோற்றத்தைத் தரும்.அதிர்ஷ்டத்தை உருவாக்கும். உடல் மற்றும் மனதுக்கு நல்ல உரமேற்றக் கூடியது. வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கொடுக்கக் கூடியது . நமக்கு தன்னம்பிக்கையைத் தரக் கூடியது. ஆண்- பெண் உறவை வலுப்படுத்தும்.. நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடியது. வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் புதன் திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியைக் கொடுக்கும். அதிர்ஷ்டம் தரும். நல்ல கற்பனை வளத்தைக் கொடுக்கும். மலட்டுத்தன்மையைப் போக்கும். தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காக்கும். நல்ல கல்வியைக் கொடுக்கும். பேச்சாற்றல் வளரும். நினைவாற்றலைப் பெருக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. மேலும் சந்திர திசை நடப்பவர்களும் முத்து அணியலாம். இது செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது. ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் தரும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையைத் தரும். நீண்ட ஆயுளைத் தரும். உறவுகளை வலுப்படுத்தும். நட்பினைப் பாதுகாக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். மேலும் சூரிய திசை நடப்பவர்களும் மாணிக்கம் அணியலாம். இது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்வில் உயர்வைத் தரும். புத்திசாதுர்யத்தைத் தரக் கூடியது. நீண்ட ஆயுளைக் கொடுக்கும். மன உறுதியையும், தன்னம்பிக்ககையையும் தரும். கருத்து வேறுபாடுகளை போக்கும். நல்ல தூக்கத்தைத் தரும். உணர்ச்சி வசப்படுதலைக் கட்டுப்படுத்தும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியையும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது. மலட்டுத் தன்மையைப் போக்கும். காதல் உணர்வைத் தரும். சிறந்த கல்வியைக் கொடுக்கும். பில்லி, சூனியங்களில் இருந்து நம்மைக் காக்கும். பேச்சாற்றலை வளர்க்கும். உடல் வளர்ச்சி பெரும். மரகதக் கல்லை உற்று நோக்கினாலே புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம். இது மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. நல்ல வசீகரத்தைத் தரும். நெஞ்சுறுதியைத் தரும். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆண்-பெண் உறவை வலுப்படுத்தும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். பிறருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைப் போக்கும். பேச்சாற்றலைத் தரும். வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். மேலும் செவ்வாய் மற்றும் கேது திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிட்டும். கோபம் குறையும். அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல துணிச்சலைத் தரும். பொறாமை, வெறுப்பு போன்ற தீய குணங்களைப் போக்கி ஞானத்தைக் கொடுக்கும். பயத்தைப் போக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகள் உருவாகும். பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். குரு திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும், நல்ல செல்வத்தைக் கொடுக்கும். இந்தக் கல் அணிவது நமக்கு கம்பீரத்தைக் கொடுக்கும். துணிச்சல் பிறக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும். பெரும்புகழ் கிடைக்கும். சூழ்ச்சிகளில் இருந்து நம்மை விடுவிக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். மேலும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம். இதை அணிந்தால் சமூகத்தில் நம் செல்வாக்கு உயரும். தெய்வீக சிந்தனையைத் தரும். நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும் . நல்ல பண்புகளைக் கொடுக்கும். உடல்பலத்தை அதிகரிக்கும் . ஆழ்மனது தெளிவை கொடுக்கும். பகையைப் போக்கக் கூடியது. வம்பு, வழக்கு இருந்தால் நமக்குச் சாதகமான சூழலை உருவாக்கும்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். ராகு மற்றும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம் இதை அணிவதால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும். திருஷ்டியைத் தடுக்கும். ஞானம், சாந்தம் கொடுக்கும். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரவல்லது. தியானத்துக்கு உகந்தது. திருமண உறவை மேம்படுத்தும். வீண் வம்பு, வழக்குகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். பெருந்தன்மையை வளர்க்கும்.

மீனம் :

மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். வியாழன் திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் செல்வ விருத்தியைக் கொடுக்கும். தோற்றத்தில் கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிட்டும். திருமணத் தடை நீங்கும். கோபம் குறையும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பைக் கொடுக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News