பக்தர்கள் தரிசனத்துக்கு பாளையங்கோட்டை அம்மன் கோவிலில்கள் திறக்கப்பட்டது

இந்து முன்னணி நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோவிலில் ஆலய நுழைவு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

Update: 2021-08-03 08:32 GMT

பக்தர்கள் தரிசனத்துக்கு பாளையங்கோட்டை அம்மன் கோவிலில்கள் திறக்கப்பட்டது.

பாளையங்கோட்டையில் பல அம்மன் கோவிலில்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் காலை 10.30 மணி அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுத்து ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பூஜைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்து முன்னணி நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் அருள்மிகு ஆயிரத்தம்மன் கோவிலில் ஆலய நுழைவு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அனைத்து கோவில்களும் உடனடியாக திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் ஆடி பெருக்கை முன்னிட்டு கோயில்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பூஜைகளும் தற்போது நடைபெற்று வருகிறது.



Tags:    

Similar News