இரவு நேர ஊரடங்கு: வைகுண்ட ஏகாதசி நாளில் விலக்கு உண்டா?

இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ல சூழலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பின் போது, பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-07 01:15 GMT

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் நேற்று முதல், இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பிற்கு,  பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து, சென்னை பார்த்தசாரதி கோயில் நிர்வாகத்தின் உதவி ஆணையர் கவேனிதா கூறியதாவது:  வருடந்தோறும் மார்கழி மாதம்  வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வைகுண்ட ஏகாதசிக்கு, சொர்க்கவாசல் திறப்பிற்கு பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

எனவே, வரும் 13 ஆம் தேதி பொதுமக்கள் காலை 6 மணி முதல், இரவு 8 மணி வரை அரசின் நிலையான வழிகாட்டுதலை பின்பற்றி தரிசனம் மேற்கொள்ளலாம். கோவிலுக்கு வரக்கூடிய பொதுமக்கள் முகக் கவசம் அணிதல்,  உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News