நெல்லூர்: ரூ. 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்

Amman Kovil -ஆயுத பூஜை முன்னிட்டு நெல்லூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அம்மன் ரூபாய் நோட்டுகளில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.

Update: 2022-09-23 02:00 GMT

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்.

Amman Kovil -ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, உள்ளிட்ட பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ. 5கோடி மதிப்பிலான 2000, 500, 200, 100, 50, 20, 10 ரூபாய் உள்ளிட்ட நோட்டுகளில் மாலை தயாரித்து அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனைக் காண நாள்தோறும் ஆலயத்திற்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News