மதுரையில் குபேர பைரவரை தரிசனம் செய்திருக்கிறீர்களா?

பூர்வ ஜென்ம பலன் இருப்பவரால் மட்டுமே மதுரை பாதாள குபேர பைரவர் தரிசனம் பெறமுடியும்.

Update: 2024-08-09 04:51 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள குபேர பைரவர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பலவிதமான சுவாரசியமான சுவாமி சன்னதிகள் இருக்கின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய சுவாரசியமான கோயில்களில் ஒன்றுதான் பாதாள குபேர பைரவர் கோயில். மதுரை வடக்கு கோபுர வாசல் மேற்கு கோபுர வாசல் சந்திக்கும் இடத்தில் பழைய பெமினா ஜவுளி கோபி அய்யங்கார் கடை மூலையில் மீனாட்சி அம்மன் கோயில் பூந்தோட்ட வளாகத்தில் சரியாக தினமும் ராகு கால நேரத்தில் மட்டுமே திறந்து பூஜைகள் நடக்கும் அற்புத “குபேர பாதாள பைரவர் கோயில்” அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சன்னதி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும். அதாவது ஒரு நாளைக்கு வரக்கூடிய ராகு காலத்தில் மட்டுமே கோயிலின் சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும் என்பது சிறப்புகளாக இருக்கின்றது. அதாவது அக்காலகட்டத்தில் இருந்து ராகு காலத்தில் மட்டும் இக்கோயில் திறக்கப்பட்டு வந்ததால் தற்பொழுது வரை அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதுவும் ராகு காலத்தில் நடை திறக்கப்பட்டு இராகு காலம் முடியும் நேரத்தில் நடை சாத்தப்படும். இராகு காலத்தில் மட்டுமே இந்த பைரவருக்கு பூஜைகள் நடைபெறும்.

திங்கள் 7.30 முதல் 9 மணி வரை

செவ்வாய் 3 முதல் 4.30 மணி வரை

புதன் 12 மணி முதல் 1.30மணி வரை

வியாழன் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

வெள்ளிக்கிழமை 10.30 முதல் 12 மணி வரை

சனிக்கிழமை 9 முதல் 10.30 மணி வரை

ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை

மட்டுமே இந்த கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.

ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும் இந்த பாதாள குபேர பைரவரை வழிபடுவதன் மூலமாக செல்வ செழிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தீர வழி வகுக்கக் கூடியவையாகவும், திருமண தடை, குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுளுடன்ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் என்று சொல்லப்படுகின்றது.

இந்த பைரவர் பாதாள குபேர பைரவராக காட்சியளிப்பதால் செல்வச் செழிப்பிற்கு பஞ்சம் இருக்காது. அது மட்டும் அல்லாது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள், சிக்கல்கள், பில்லி, சூனியம் என அனைத்தையும் விரட்டி அடிக்கிறார். பக்தர்கள் வேண்டும் வேண்டுதலுக்கு உடனே செவிசாய்த்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார். பூர்வ ஜென்ம பலன் இருப்பவரால் மட்டுமே இந்த பைரவரை தரிசிக்க முடியும்.

ராகு காலத்தில் மட்டும் திறக்கப்பட்டு பூஜை செய்யப்படும் இந்த குபேர பைரவர் சக்தி வாய்ந்த பைரவராக இருப்பதினால் மக்கள் அனைவருமே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தால், குபேர பைரவரை தரிசனம் செய்யாமல் செல்ல மாட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது.

Tags:    

Similar News