சில நொடிகளில் பிறப்பு ஜாதகம்..! ஒரே 'க்ளிக்' ஜாதகம் உங்கள் பார்வையில்..!
Jathagam Online Tamil -ஆன்லைனில் ஜோதிடம் பார்க்கும் எண்ணற்ற தளங்கள் வந்துவிட்டன. பல தளங்கள் இலவச ஜாதக பலன்களை வழங்குகின்றன. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.
Jathagam Online Tamil -ஜோதிடக்கலை எளிய ஜனங்களுக்கு எட்டாக் கனியாகவே போய்விட்டது. இந்த மாபெரும் கலையை எல்லோருக்கும் புரியும்படி எளிமைப் படுத்தினால் இன்னும் பலரிடம் நம்பிக்கைக்குறியாதாக மாறும்.
ஏன்? எதற்கு? எப்படி? என்று தெரிந்து ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல், அறிந்து கொள்ளத் தேவையும் இல்லாமல் அல்லது தெளிவாக சொல்வதற்கு யாரும் இல்லாத நிலையில்தான் ஜோதிடர்களும், ஜோதிட ஆர்வலர்களும் இருக்கின்றார்கள். அதேநேரத்தில் ஜோதிடத்தின் அத்தனை சூட்சும அமைப்புகளையும், விதிகளையும் பாமரனுக்கும் புரியும்படி விளக்கிவிட முடியாது.
ஜோதிடம் பல சிக்கலான பின்னல்களைப்போன்றதுதான். பல முரண்பாடுகளும் எழலாம். பல நேரங்களில் இங்கே விதியைவிட, விதிவிலக்கை அதிகமாக கருத்தில் கொள்ளவேண்டிய கட்டாயநிலை ஏற்படலாம். ஜோதிடக்கலை அதன் உள்ளடக்கத்தில் எவ்வித குறைகளையும் வைத்திருக்கவில்லை, மாறாக ஜோதிடத்தை புரிந்து கொள்பவரிடம்தான் குறை இருக்கிறது. ஜோதிடக்கலை என்பது ஒரு அற்புத மகாக் கலை.
ஜோதிடர்களையும், ஜோதிடத்தையும் விளக்குவதற்கு இங்கே ஏராளமான சம்பவங்கள் கதைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. பதினெட்டாம் பிறந்த நாளில் இளவரசன் பன்றியால் (வராஹம்) இறந்து போவான் என்று மிகிரர் என்ற ஜோதிடஞானி அரசனிடம் சொல்கிறார். விதியை வெல்ல நினைத்த அரசன் காட்டுக்குப் போனால்தானே மகன் இறப்பான் என்று இளவரசனை அரண்மனைக்குள்ளேயே வைத்து பாதுகாப்பாக வைத்திருந்தார். ஆனால், மாடத்தில் பொருத்தப்பட்டிருந்த பன்றித்தலை இளவரசர் மீது விழுந்து இளவல் இறந்து போக, அங்கே ஜோதிடமும், ஜோதிடரும் ஜெயித்து வெறும் மிகிரர் என்று அழைக்கப்பட்ட அவர் “வராஹமிகிரர்” ஆனதும் ஜோதிடக் கலையால்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. .
அதே பதினெட்டாம் பிறந்த நாளில் தன் மகன் இறந்து போவான் என்று வேறொரு ஜோதிடர் கணிக்கிறார். ஆனால் இந்த அமைப்பிற்கு குருவின் பார்வை இருப்பதால் மகனின் மரணம் இருக்காது என்று உறுதி செய்கிறார். கணிப்புத் தவறி மகன் பதினெட்டாம் பிறந்த நாளில் மரித்துப் போகிறான். அதிர்ந்து போன ஜோதிடர் இந்த அற்புதக் கலையே பொய் என்று மகனின் சிதையிலேயே அனைத்து ஓலைச்சுவடிகளையும் போட்டு எரிக்க முற்படும்போது முக்காலமும் உணர்ந்த ஞானியான நாரதர் வந்து தடுக்கிறார்.
மகன் ஜாதகத்தில் குருபார்வை இருக்கிறது என்று கணித்தாயே, கிரகங்களுக்கும் மனிதர்களைப் போலவே விழிப்பது, காலைக்கடன் கழிப்பது, போஜனம், தாம்பூலம், தூக்கம் போன்ற நித்யகர்மாக்கள் உள்ளன என்பது ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே அதை நீ அறிவாயா எனக் கேட்டு, மகன் ஜாதகத்தில் குருபார்வை உள்ளது என்று நீ கணித்த போது குருவின் நித்யகர்மா என்ன என்பதை பார்த்தாயா என்று நாரதர் கேட்கிறார்.
தடுமாறிய ஜோதிடர் மீண்டும் கணித்துப் பார்க்கையில் குருவின் அப்போதைய நித்ய கர்மா தூங்குவது என வருகிறது. தூங்கும் குருவிற்கு ஏது பார்வை? தவறை உன்பேரில் வைத்துக் கொண்டு ஓலைச்சுவடிகளை ஏன் எரிக்கிறாய் என்று நாரத மகரிஷி கேட்பதாக இன்னொரு ஜோதிடக் கதை சொல்கிறது.
உண்மையில் கண் பார்வை இல்லாதவர்கள் யானையை பார்ப்பது போலத்தான் ஜோதிட சாஸ்திரமும். யானையின் முன்னங்காலை மட்டும் தடவிப் பார்க்கும் ஜோதிடர், யானை தூண் போல இருக்கும் என்கிறார். துதிக்கையைப் பார்ப்பவர் உருளையைப் போன்றது என்கிறார். கடைநிலையில் இருக்கும் ஜோதிடர் வாலின் நுனி முடியை மட்டும் தடவிப் பார்த்துவிட்டு யானை சிறு குச்சியைப் போலத்தான் இருக்கும் என்கிறார். உண்மையில் இந்த யானையை முழுதாகப் பார்த்த கண்தெரியாதவர்கள் யாரும் இல்லை.
சரியான கணிப்பு மட்டுமே ஜாதகத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகிறது. தற்போது பல ஆன்லைன் ஜாதக தளங்கள் வந்துவிட்டன. அதன் மூலமாக நிமிடத்தில் உங்கள் பிறப்பு ஜாதக பலன்களை அறிந்துகொள்ள முடியும்.
அந்த வகையில் தமிழில் பிறப்பு ஜாதக கணிப்புகளை இலவசமாக வழங்கும் 'ப்ரோகேரளா' தளத்தின் இணைப்பு வழங்கப்பட்டுளளது. இதை 'க்ளிக்' செய்து உங்கள் பிறப்பு ஜாதகத்தை ஒரு சில வினாடிகளில் அறிந்து கொள்ளுங்கள்.
கீழே உள்ள இணைப்பின் மூலமாக ஆன்லைன் ஜோதிடம் இலவசமாகப் பெறலாம். உங்களின் பிறந்த தேதி, பிரட்ணஹா இடம் பிறந்த நேரம் போன்ற விபரக் குறிப்புகளை உள்ளீடு செய்து உங்களுக்கான ஜாதக பலனை பெற்றுக்கொள்ளலாம்.
https://www.prokerala.com/astrology/jathagam-tamil.php?la=ta
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2