புதிய வீட்டுக்கு கிரகப்பிரவேசம் எப்படி செய்யணும்..? தெரிஞ்சுக்குவோமா..?

House Warming Ceremony in Tamil-வீடு என்பது குடும்பத்தினர் தாய்,தந்தை, குழந்தைகள் மற்றும் உறவுகள்,நண்பர்கள் மகிழ்ச்சி பொங்க வாழும் கூடு.

Update: 2022-08-18 06:07 GMT

House Warming Ceremony in Tamil

House Warming Ceremony in Tamil

வீட்டைக்கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார் என்பார்கள், நம் முன்னோர்கள். ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு ஒன்று இருப்பது அவசியம். நமக்கு மட்டுமல்லாமல் நமது வாரிசுகளும் அந்த வீட்டில் மகிழ்ச்சியோடு சிறப்பாக வாழவேண்டும். ஆகவே ஒரு வீட்டில் தெய்வீகம் நிறைந்து இருக்க கிரகப்பிரவேசம் செய்கிறார்கள். இந்த கிரகப்பிரவேசம் சடங்கு எப்படி செய்யவேண்டும் என்று தெரிஞ்சிக்கலாம் வாங்க.

கிரகப்பிரவேசம் என்று கூறப்படும் புதுமனை புகுவிழாவை மாசி, வைகாசி, ஆவணி போன்ற மாதங்களில் செய்வது சிறப்பாகும். அனுபவம் வாய்ந்த ஜோதிடர் ஒருவரை அணுகி கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்த முகூர்த்த தேதியை முடிவுசெய்ய வேண்டும்.

ஒரு முகூர்த்த தினத்தில் மஞ்சளும்,பசுமையும் கலந்த உங்கள் வீட்டின் வண்ண கிரகப்பிரவேச அழைப்பிதழை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் குங்குமம்,வெற்றிலை,பாக்கு, மஞ்சள் ஆகியவற்றோடு சேர்த்து கொடுக்க வேண்டும்.

அதிகாலை ஹோமம் 

பொதுவாக கிரகப்பிரவேச பூஜை மற்றும் ஹோமத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 என்ற நேரங்களிலும் செய்வதே சிறந்ததாகும். காலை 9 மணிக்குப் பிறகு நல்ல நேரமாகவே இருந்தாலும் கிரகப்பிரவேசம் சடங்கு மற்றும் ஹோமம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

அதிகாலை 4 மணிக்கு கிரகப்பிரவேச பூஜை செய்யப்படும் போது, அதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிரகப்பிரவேச சடங்குகளை எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் செய்ய வேண்டும். மிகுந்த ஆடம்பரமான கலாச்சார உடைகளை தவிர்த்து, வீட்டின் தலைவர்களான கணவன் – மனைவி பாரம்பரிய வேட்டி, சேலை உடைகளை பூஜை நேரத்தில் அணிந்து கிரகப்பிரவேச பூஜை சடங்குகளை செய்ய வேண்டும்.

கோபுர தரிசனம் 

வீடு கட்டியிருக்கும் பகுதியில் அருகே உள்ள ஏதேனும் ஒரு கோவிலின் கோபுர வாசலில் சாமிப்படம், அரிசி, உப்பு, பருப்பு, குடத்தில் நீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு தெய்வத் துதிகளைச் சொல்லியவாறு பூஜை முறைகளை செய்வதால் தெய்வங்களின் அனுக்கிரகம் உண்டாகும்.

கோ பூஜை 

புதிய வீட்டிற்குள் தெய்வீக விலங்கான கன்று ஈன்ற பசுவை அழைத்து வந்து கோ பூஜை செய்யும் போது வீட்டு உரிமையாளர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கு பொட்டு வைத்து, பசு ஈன்ற கன்றுக்கும் பொட்டு வைத்து, துணி, மாலை சாற்றவேண்டும். அரிசி, வெல்லம் கலந்த கலவை மற்றும் அகத்தி கீரையை பசுவுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும். பின்பு அன்றைய தினம் காலையில் வரும் சுப முகூர்த்த நேரம் முடியும் முன்பாக அடுப்பில் ஒரு புதிய பாத்திரத்திற்கு, பூ, சந்தனம், குங்குமம் வைத்து, பசும்பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்த பின் கைகூப்பி வணங்கி அதனை, சாமி படத்தின் முன்பாக வைத்து பூஜை பொருட்களுடன் நிவேதனம் செய்து ஆரத்திக் காட்டி வணங்க வேண்டும். இவ்வாறாக முறைப்படி கிரகப்பிரவேச சடங்கு செய்வதால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் என்றென்றும் நன்மையான பலன்களை பெறுவார்கள். மகிழ்ச்சி பெருகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News