wife quotes in tamil தாய்க்கு தாயாக, தாரத்துக்கு தாரமான மனைவியின் பெருமை.... வாசகங்கள்...

Wife Quotes in Tamil-மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்.ஆம்.. உண்மைதான் . பல ஆண்களின் வாழ்க்கையானது மனைவி வந்தபின்னர்தான் முன்னேற்றம் கண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையே.

Update: 2022-09-13 06:55 GMT

Wife Quotes in Tamil


வாழ்க்கை என்பது பல நிலைகளைக் கொண்டது. இளமைப்பருவம், குமரப்பருவம், இடைப்பருவம், வயதான பருவம் என நான்கு நிலைகளாக பிரித்துகொண்டால் இதில் இளமைப்பருவத்தில் நாம் தாய், தந்தையின் மேற்பார்வையில்தான் வளர்கிறோம். பள்ளி, கல்லுாரி வரை அவர்கள் நம்மை கண்காணிக்கின்றனர். ஓரளவுக்கு சம்பாதிக்கும் நிலை வரும்போது எந்த மகனோ, மகளோ பெற்றோர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை. அவர்கள் மாறிவிடுகின்றனர். பெற்றோர்களும் சம்பாதிக்கின்றனர் என கண்டு கொள்வதில்லை.

ஆனால் இங்குதான் ஆபத்தே ஆரம்பமாகிறது. காரணம் சம்பாதிக்கும்இளைஞர் உள்ளூரில் வேலை பார்த்தால் அதிக பிரச்னைகள் இல்லை. அதுவே வெளியூர் என்றால் ஒருசிலர் கூடாநட்புடன் கூடிவிடுவதால் பல பழக்கவழக்கங்கள் ,இது திருமணமான பின்னும் தொடர்வதால் குடும்பத்தில் பலசிக்கல்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? என அலசி ஆராயும்போதுதான் இவனுக்கு ஒரு கால்கட்டு போட்டால்தான் வழிக்கு வருவான் என பெற்றோர்கள் எல்லா சங்கதிகளையும் கேள்விப்பட்டு தேட ஆரம்பித்து கடைசியில் கைப்பிடித்தும் விட்டுவிடுகின்றனர்.

அப்புறந்தான் மாப்பிள்ளைக்கு எல்லாம் ஆரம்பமாகிறது. தான்தோன்றியாய் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுற்றி திரிந்தவனுக்கு செக்யூரிட்டியாக மனைவி என்ற அந்தஸ்தில் ஒருவர் வந்தபின்னர் எல்லாவற்றுக்கு செக் வைக்க ஆரம்பிக்கிறாள். பின்னர்தான் அவனுடைய பழக்க வழக்கங்களில் மாற்றமே ஆரம்பமாகிறது. முதன் முதலாக பிரண்ட்ஷிப் கட்.. பழக்க வழக்கங்கள் கட்...என கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. பின்னர் கொஞ்சம் நாட்களில் மனைவி சொல்லோ மந்திரம் என்ற நிலைக்கு வந்து விடுகிறான் . எப்போது? என கேட்கிறீர்களா? ஒரு வாரிசு உருவான பின் சரணாகதி அடையும் நிலைக்கு ஆண்கள் தள்ளப்பட்டுவிடுகின்றனர். ஆக நல்வழிப்படுத்தும் தாயாக, குடும்பத்தின் பொறுப்புள்ள மனைவியாக உள்ள எத்தனையோ பெண்கள் அவர்களுடைய கணவர்களை வாழ்வின் உயரத்துக்கும் செல்ல பேருதவி புரிந்துள்ளனர். புரிகின்றனர்... எனவே மனைவி என்ற உறவு வந்த பின்னர்தான் பல ஆண்களின் வாழ்க்கை நிலையே மாறியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையே.


மனைவியின் பெருமைகளைப் பற்றிய அன்பு வாசகங்கள்...

கணவன்பெயரை சொல்லி அழைக்காத மனைவி பேரழகுதான்.இருளினில் மிளிரும் தேய்பிறை நிலவாய் நீ இருப்பது என்னை

கவர்ந்திடவா...

எனக்கு பிடித்தவளே உனது வார்த்தையில் நான் அடிமையே எனது பேச்சில் நீயே, உனது கனவில் நானே என் மூச்சில் நீயே...

மின்னல்கள் தாக்கினாலும் மீண்டிடுவேன் போலும், உன் விழிகள் தாக்கியதிலிருந்து மீளவில்லை நானும்

என்னவள் சிரிக்கும்போது அழகாக இருக்கவேண்டும்.. அவளை சிரிக் கவைத்து பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும்.

கண்டபடி பேசும் நான் உன்னைக்கண்டவுடன் பேச்சே வருவதில்லை.

எனக்குபிடித்தவளே, உனது வார்த்தையில், நான் அடிமையே எனது பேச்சில் நீயே, உனது கனவில் நானே என் மூச்சில் நீயே,என் கைகளில் கவிதை, அதுவும் உன்னை நினைத்தே.

நிலவின் ஒளிச்சாரலில், நின் முகம் கண்டானடி பித்தனாய் நின்றானடி அந்த பிரம்மனும்.

அவள் என்பதே ஆகச்சிறந்த போதை என்பேன்.. அந்த பேதையே என் போதை

இசை இல்லாமலேயே இனிமையாக நடனமாடுகின்றன.உன்இமைகள் உன்னைச் சுற்றியுள்ள எல்லாமேஅதிசயம்தான் உன்னையும் சேர்த்து

உன் கைகோர்த்தே கரைந்திட ஆசை தேய்பிறையாக உன்காதலில் கரைந்த வளர்ந்த முழுமதியாக உன்னுடைய நான்.

என்னவள் சிரிக்கும்போது அழகாய் இருக்க வேண்டும். அவனை சிரிக்க வைத்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

உன்னைப்பற்றி எழுதும்போது, பேனாவும் கண்ணீர் சிந்துகிறது மைகளாய்..

உன்னைச்சுற்றியுள்ள எல்லாமே அதிசயம்தான் உன்னையும் சேர்த்து

நட்சத்திரங்கள் மண்ணிற்கு வருவதில்லையாம்... நீ என்ன விதிவிலக்கா



கள்ளம் கபடம் இல்லாத உன் சிரிப்பில் என்னை உன் மன சிறையில் அடைத்துவிட்ட கள்ளி நீ.

என் உயிர் பிரிந்தால் உன் கண்களில் நீர் வருமோ இல்லையே எனக்கு தெரியாது. ஆனால் உன் கண்களில் நீர் வந்தால் அடுத்த நொடியே என் உயிர் பிரிந்திடும்.. இந்த உடலை விட்டு..

நீ வாழும் நொடிகள் எனக்காக இருந்தால் நான் வாழும் நிமிடங்கள் உனக்காக இருக்கும் என்றும் நிரந்தரமாய் வாழ ஆசைப்படுகிறேன் .. உந்தன் மனதில் என் அன்பே...

நிலவின் ஒளிச்சாரலில்நின் முகம் கண்டானடிபித்தனாய் நின்றானடி அந்த பிரம்மனும்!

உன் கை கோர்த்தே கரைந்திட ஆசைதேய்பிறையாக!உன் காதலில் கரைந்தே வளர்ந்தமுழுமதியாகஉன்னுடைய நான்!

வெண் மேகமோகார் மேகமோஅனைத்தும் அழகேஉன் தோள் சாய்ந்து ரசிக்கயில்!

விரும்பியே ஆயுள் கைதி ஆனேன்!காலமெல்லாம் அவள் காதலை தண்டனையாய் பெற்றுஅவளை உயிராய் சுமக்க!

இருளில் அவளுடன் அமர்ந்து ஒப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன்!

மிளிர்வது, என்னவளின் முகமா?இல்லை அரை வட்ட நிலவா? என்று.

தேவதை போல மனைவி கிடைக்க வேண்டும்என்பதை தாண்டி கிடைக்கும் மனைவியை தேவதையை போல் பார்த்து கொள்ளவிரும்புகிறவன் தான் உண்மையான ஆண்!

மனைவி வீட்டில் இல்லைநிம்மதி என்று அதிகம்நகைச்சுவை ஆயிரம் பேசினாலும்.வீட்டில் நுழைந்தவுடன் மனைவியைகாணாமல் ஏங்கி தேடும் கண்களே ஏராளம்.

உணர்ச்சிகளால் ஆள நினைப்பதைவிட்டுஉணர்வுகளால் ஆள்ந்துபார்உன் துணைவியைவிடஓர் உயர்ந்த உயிர் தோழியைவாழ்வில் நீ காணவே மாட்டாய்.

நான் உன்னை நேசிப்பதுஉன்னோடு வாழ மட்டுமல்ல உனக்காக மட்டும் வாழ.

எத்தனை முறைஎழுதினாலும் படித்தாலும்திகட்டாத ஒரே கவிதை உன் பெயர் தான்!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News