உண்மையான அன்புக்கு ஏங்குபவரா? அப்ப படிங்க

Unmaiyana Anbu quotes in Tamil-உண்மையான அன்பு என்ற பாக்கியம் கிடைத்தவர்கள் எல்லாம் இந்த உலகின் அதிஷ்டசாலிகள் தான். அதன் மதிப்பு அந்த அன்பிற்காக ஏங்குபவர்களுக்கு தான் புரியும்.;

Update: 2023-01-15 11:21 GMT

Anbu Quotes in Tamil

Unmaiyana Anbu quotes in Tamil

உண்மையான அன்பின் உண்மையான அர்த்தம் ஒவ்வொரு நபருக்கும் சூழ்நிலைக்கும் வேறுபட்டது. இறுதியில், அதை நாம் இறுதியாக அனுபவிக்கும் போது நாம் என்ன என்பதை உணர்கிறோம் . உண்மையான அன்பு என்ற பாக்கியம் கிடைத்தவர்கள் எல்லாம் இந்த உலகின் அதிஷ்டசாலிகள் தான். அதன் மதிப்பு அந்த அன்பிற்காக ஏங்குபவர்களுக்கு தான் புரியும்.

உண்மையான அன்பின் உலகளாவிய வரையறை நம்மிடம் இல்லாவிட்டாலும், அது எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்

அன்பு குறித்து திருவள்ளுவர் ஒரு அதிகாரமே படைத்துள்ளார். அவற்றில் சில

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் எதுவும் உண்டோ? அன்புடையாரின் சிறு கண்ணீரே அவர் அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே; அஃது இல்லாதவருக்கு எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும்


உண்மையான அன்பு குறித்த சில மேற்கோள்கள்

"பூமியில் பிரகாசிக்கும் சூரியனைப் போல உங்கள் அன்பு என் இதயத்தில் பிரகாசிக்கிறது." - எலினோர் டி குய்லோ

"ஒவ்வொரு நாளும் நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன், நேற்றை விட நாளையை விட இன்று அதிகம் நேசிக்கிறேன்." - ரோஸ்மண்டே ஜெரார்ட்

"எப்படி, எப்போது, எங்கிருந்து என்று தெரியாமல் நான் உன்னை நேசிக்கிறேன். பிரச்சனையோ பெருமையோ இல்லாமல் எளிமையாக உன்னை நேசிக்கிறேன். – பாப்லோ நெருடா

"உன் மீதான என் அன்பில் ஆழமில்லை; அதன் எல்லைகள் எப்போதும் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. - கிறிஸ்டினா ஒயிட்

"நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னவாக இருக்கிறாய் என்பதற்காக மட்டுமல்ல, நான் உன்னுடன் இருக்கும்போது நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்காக." - ராய் கிராஃப்ட்

இதயம் துடிப்பது நின்றால் மட்டும் மரணம் அல்ல, சிலஅன்பான இதயங்களின் பேச்சு நின்றால் கூட மரணம் தான்.

ஆழமான காதலும் உண்மையான அன்பும் உயிரைவிட புனிதமானது. உயிர் பிரிந்தாலும் உண்மையான அன்பையும் ஆழமான காதலையும் பிரிக்க முடியாது.

ஒருவரை இழக்கும்போது வரும் கண்ணீரை விட அவர்களின் அன்பை இழக்க கூடாது என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு தான் வலி அதிகம்.

ஒரு பெண்ணோ ஒரு ஆணோ திமிராக இருப்பதற்கு அவர்களின் ஒழுக்கமும், நேர்மையும், உண்மையான அன்பான குணங்களுமே காரணம்.

யாருடன் வாழ முடியுமோ அவர்களை நேசிப்பதை விட, யாருடைய அன்பு இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை நேசியுங்கள். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.


வாழ்க்கையில் உண்மையான அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியம் அல்ல. அந்த உறவுகளுடன் வாழ் நாள் முழுவதும் அன்பாக இருப்பதே முக்கியம்.

வாழ்க்கை எனும் நீண்ட தூர பயணம் இலகுவாக இருக்கும் உண்மையான அன்பு கொண்டவர்கள் நம் அருகினில் இருக்கும் போது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News