மாசிலா உண்மைக்காதலே என்பவரா நீங்கள்? இதோ காதல் கவிதைகள் படித்திடும் நேரம்

True Love Kavithai Tamil-காதலினால் மானுடருக்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்பமுதற் கலைகளுண்டாம். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே - பாரதி

Update: 2022-09-12 09:35 GMT

True Love Kavithai Tamil

True Love Kavithai Tamil

உலகமெங்கும் வியாபித்திருக்கின்ற ஓர் மந்திர சக்தி காதல். ஒவ்வொருவரும் காதலை ஒவ்வொரு விதமாகப் பாடியிருக்கிறார்கள்; வர்ணித்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் அற்புத சுவையாக மனதைக் கிள்ளுகிறது. காதல் கனவுகளிலும், நினைவுகளிலும் மனது மயங்குகிறது.

காதல் சுவையானது. சுமையாகத் தோன்றினாலும் அது சுகமானது. அபார சக்தி கொண்டது. அது கோழையை வீரனாக்கும். வீரனை பசுவைப் போல் சாதுவாக்கும். ஆண்டியை அரசனாக்கும், அரசனை அடிமையாக்கும். காதலால் வாழ்வில் ஏற்றங்களும் ஏற்படலாம். ஏமாற்றங்களும் ஏற்படலாம். எனினும் காதல் அற்புதமானது.

மனித சமூகத்தில் காதல் என்பது எத்தனையோ விஷயங்களை நிகழ்த்துகிறது. ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கிவிட்டால், அவனுடைய பேச்சில் நடை, உடை, பாவனையில் மெருகேறிவிடுகின்றது. தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கு வேகம் பிறக்கிறது.

இது போன்று காதலில் விழுந்தவர்கள் கூறுவதை கேளுங்கள்

  • வாழ வேண்டும் என்பதில் ஆசை இல்லை! உன்னுடன் வாழ வேண்டும் என்பதில் தான் பேராசை
  • சில நேரங்களில் எனக்கே ஒரு சந்தேகம், என் இதயம் எனக்காகத்தான் துடிக்கிறதா? என்று
  • மெய் அன்பில் பேரரசனும் சிறுபிள்ளையாவான், காதலெனும் உயிரோவியத்தின் முன்

அழகை பார்க்கும் காதலுக்கு ஆயுள் கிடையாது

நிறத்தை பார்க்கும் காதலுக்கு நிரந்தரம் கிடையாது

ஆடம்பரத்தை பார்க்கும் காதலுக்கு ஆயுள் கிடையாது

அன்பை பார்க்கும் காதலுக்கு அழிவென்பதே கிடையாது


காலங்கள் தான் இங்கே

கடந்து போகிறதே தவிர

அன்று உன்னை காதலித்த

என் இதயம் இன்றும்

மாறாமல் உனக்காக துடிக்கிறது


அவள்

நெருக்கத்தில் இருந்தாலும்

தொலைவில் இருந்தாலும்

என் மனதின் காதல் மாறாது

என் இதயம் அவளை நினைக்க மறக்காது


காற்றில் கலந்த மலர்களின்

வாசனையையும்

என்னில் நிறைந்த உனது

நேசத்தையும்

என்றும் பிரிக்கமுடியாது


உன்னுடைய

அளவற்ற அன்பிற்கு முன்னால்

என் கோபமும் பிடிவாதமும்

தலை குனிந்து

தோற்று போகிறது

உனக்காக நான் எதையும்

இழக்க தயாராய் உள்ளேன்

ஆனால் எதற்காகவும்

உன்னை இழக்க

என் மனம் அனுமதிக்காது

வருடந்தோறும்

பல பெண்களை காதலிப்பது

காதல் இல்லை

எத்தனை வருடமானாலும்

ஒரே பெண்ணை காதலிப்பதே

உண்மையான காதல்

மரணம் வரை

மாறாத அன்பும் காதலும்

கிடைத்து விட்டால்

என்றும் மகிழ்ச்சி தான்

நாம் தேடி போகும்

அன்பு அழகானது

நம்மை தேடி வரும்

அன்பு ஆழமானது

கூடுதலாக எதையும் கேட்க வில்லை

கூடவே இரு அது போதும் எனக்கு.

கெட்ட சிந்தனைகள் இருக்கின்ற உள்ளத்தில் நல்ல காதல் இருக்காது. அற்ப சுகங்களுக்காக மட்டுமே வருகின்ற காதல் யாருடைய வாழ்விலும் நிலைக்காது. கருத்தொருமித்த காதல் வெற்றி பெறுகிறது. ஈருடல் ஓருயிரான உறவுதான் கடைசிவரை தொடர்கிறது. தூய்மையான காதல், ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்ளச் செய்கிறது. ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கக் செய்கிறது. எனவே காதல் என்னும் கோவிலில் அன்பென்னும் தீபம் ஏற்றுங்கள். வாழ்க்கையைக் காதலியுங்கள். குடும்பத்தைக் காதலியுங்கள். நட்பைக் காதலியுங்கள். காலமெல்லாம் காதலை கொண்டாடுங்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News