அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!

Friendship Memories Quotes in Tamil-பள்ளிப்பருவ நட்பு என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு வசந்த காலமே! அதை நினைக்கும்போதே நெஞ்சம் இனிக்கும்

Update: 2022-09-15 11:28 GMT

Friendship Memories Quotes in Tamil

நண்பர்கள் பெரும்பாலும் எதிர்பாராத இடங்களில் காணப்படுகின்றனர். விளையாட்டு மைதானத்தில் குழந்தையாக நாம் உருவாக்கிய நண்பர்கள், அலுவலகத்தில் நமக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் நம் குழந்தைகள் அல்லது வாழ்க்கைத் துணை மூலம் நாம் சந்தித்த நண்பர்களாக இருக்கலாம்.

ஆனால், பள்ளிப்பருவ நட்பு என்பது எந்த பலனையும் எதிர்பாராமல், நாம் சிறகடித்துப் பறந்த பள்ளி, கல்லூரி நாள்களை நினைத்துப் பார்த்தால் நம் நண்பர்களுடன் கழித்த இனிய தருணங்களே முதலில் நம் மனதில் சிறகடிக்கும். பசுமை நிறைந்த நினைவுகளே என நினைத்தும்,  'என் பிரண்ட போல யாரு மச்சான்' என்று கவலையின்றி பாடித்திரிந்த காலங்கள், 'நண்பேன்டா' என்று வசனம் பேச வைத்த சம்பவங்கள் என்று பல நினைவுகள் பூத்துக்குலுங்கும்.

நண்பர்கள் பிரிந்தாலும் நட்பு பிரிவதில்லை.  நாம் சோகமாக இருக்கும்போது உண்மையான நண்பர்களின் கவனிப்பு மற்றும் ஆதரவை விட வேறு எதுவும் நமக்கு மகிழ்ச்சியைத் தர முடியாது. அத்தகைய நட்பின் பெருமையை விளக்கும் விதத்தில் உங்களுக்காக சில நட்பு வாசகங்கள்.

வாழ்க்கை நமக்கு பல அழகான நண்பர்களைத் தரும்! ஆனால், உண்மையான நண்பர்கள் மட்டுமே நமக்கு அழகான வாழ்க்கையை கொடுக்க முடியும்

நீண்டதூரம் சென்று மறைந்தாலும் மனதை விட்டு என்றும் மறைவதில்லை…

பள்ளி நாட்களில் அரட்டை அடித்த நினைவுகளை

சேரும் போது அழுவதும் பள்ளிக்கூடத்தில் தான்…

பிரியும் போது அழுவதும் பாடசாலையில் தான்

பள்ளி முடிந்து நண்பர்களுடன் சைக்கிளில் வீட்டுக்கு சென்ற மகிழ்ச்சி

இப்போது கார்களில் சென்றாலும் கிடைப்பதில்லை

ஒரு காலத்தில் சந்தோச பறவைகளும்,

நட்பு பறவைகளும் குடியிருந்த நினைவு கூடு பள்ளிக்கூடம்

ஒன்பது மணி ஆனாலும் வருத்தப்பட்டோம், நான்கு மணி ஆனால் சந்தோஷப்பட்டோம்…

இப்போது அந்த நாட்களுக்காக ஏங்கி நிற்கின்றோம்

கல்வி சுமையால் தேய்பிறையாய் இருந்த எங்களை…

இதய சுமையால் வளர்பிறை ஆக்கியது இந்த நட்பு

அண்டம் பிளந்தாலும்

அன்பு உடையாது!

பூமி புரண்டாலும் - பள்ளி

நட்பு பிரியாது !

உன் நினைவுகள் என் ஆழ்மனதில்

சற்று ஆழமாகத்தான்

புதையலாக புதைக்கப்பட்டுள்ளது

காலம் கடந்தாலும்

பசுமையான நினைவுகளோடு

திரும்பபார்க்க நினைக்கும்

திரும்பபார்க்க வைக்கும்

பள்ளி மற்றும் கல்லூரி

நண்பர்கள் வாழ்க்கையில்

கிடைத்தபொக்கிஷமே.

எனக்கு முன்னால் நடக்காதே, நான் பின்தொடராமல் போகலாம். என் பின்னால் நடக்காதே, நான் வழிநடத்தாமல் போகலாம். என் அருகில் நடந்து வா. உன் நண்பனாக இருப்பேன்

நட்பு ... நாம் பள்ளியில் கற்கும் ஒன்றல்ல.

ஆனால் நட்பின் அர்த்தத்தை கற்றுக்கொள்ளவில்லை என்றால், உண்மையில் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News