சுவாமி விவேகானந்தரின் சிறந்த பொன்மொழிகள் தமிழில்..

Positive Vivekananda Quotes in Tamil-இன்று இந்தியாவில் நிலவும், மதம், ஜாதி, பாகுபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு அன்றே தனது தத்துவங்கள் மூலம் பதில் சொல்லியவர்

Update: 2022-08-24 07:01 GMT

சுவாமி விவேகானந்தர் 

Positive Vivekananda Quotes in Tamil-சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் பிறந்த மிகப்பெரிய மகான். சுவாமி விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு வங்காள குடும்பத்தில் பிறந்தார். அவரது மற்றொரு பெயர் நரேந்திரநாத தத்தா. யோகா மற்றும் வேதாந்தத்தின் இந்திய தத்துவங்களில் விவேகானந்தர் ஒரு முக்கிய நபராக இருந்தார். ராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார்.

இன்று இந்தியாவில் நிலவும், மதம், ஜாதி, பாகுபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு அன்றே தனது தத்துவங்கள் மூலம் பதில் சொல்லியவர்

விவேகானந்தரின் சிறந்த மேற்கோள்களை இங்கே தமிழில் தருகிறோம் .

  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை படைத்தவன் என நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் (ஆனால் முயற்சி தேவை)
  • செயல் நன்று; சிந்தித்து செயலாற்றுவதே நன்று; உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பிடு; அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன்னே நிறுத்து; அதிலிருந்து நற்செயல்கள் விளையும்
  • தோல்விகளைப் பற்றிக் கவலையுறாதீர்கள். இலட்சியத்திலிருந்து ஆயிரம் முறை வழுக்கி விழுந்தாலும், இலட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் ஏதும் நேர்ந்தாலும், திரும்பத் திரும்ப அந்த இலட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். இலட்சியத்தை அடைய ஆயிரம் முறை முயலுங்கள். அந்த ஆயிரம் முறை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள்
  • வெற்றிகளை சந்த்தித்தவனின் இதயம் பூவைப் போன்று மென்மையானது. தோல்வியை மட்டுமே சந்த்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது
  • இதயம் சொல்வதை மட்டும் செய்யுங்கள். வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டுமே உண்டு
  • இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமேயானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமேயானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்
  • எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
  •  தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
  • உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
  • சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
  • பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
  • கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
  • எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News