திருமணத்திற்கு பெயர் பொருத்தம் பார்த்தால் மட்டும் போதுமா? .,...படிங்க...
Peyar Porutham in Tamil For Marriage-திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. உண்மையில் இருமனங்கள் இணைந்தால்தான் திருமணம்....படிங்க..
Peyar Porutham in Tamil For Marriage
தமிழகத்தினைப் பொறுத்தவரை கல்யாணம் என்ற பேச்சை எடுத்தாலே உடனே ஜாதகப் பொருத்தம் இருக்கிறதா? என்ற கேள்வி தான் முதல் கேள்வியாக இருக்கும். அந்த வகையில் ஜாதகம் என்பது மக்கள் மனதில் பதிந்து போனது.ஒரு சிலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம். என் பெண்ணிற்கு கல்யாணத்திற்காக ஜாதகத்தினை எடுத்துவிட்டேன் என சொல்வார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?- அந்தப் பெண்ணின் ஜாதகத்திற்கு ஏற்ற வரனைத் தேட ஆரம்பித்துவிட்டார் என்று அர்த்தம்.
இதுபோல் அக்காலம் முதல் இக்காலம் வரை ஒவ்வொரு குடும்பத்திலும் திருமணப் பொருத்தங்கள், ஜாதகம் பார்ப்பது என்பது வாழையடி வாழையாக அவர்களின் முன்னோர்கள் எதனை பின்பற்றினார்களோ அதன் மூலம் பார்த்து திருமணத்தினை உறுதி செய்வதை வழக்கப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
நாம் இருவரும் திருமணத்தின் மூலம் அக்னி சாட்சியாக வாழ்வில் ஒன்றாய் இணைந்து விட்டோம்...என்ற பந்தப்பிணைப்பு (கோப்புபடம்)
சரிங்க... பெற்றோர்கள் பார்க்கும் திருமணத்திற்குதான் ஜாதகம்,ஜோசியம் என பார்க்கிறீர்கள்? காதல் திருமணத்திற்கு எதையும் பார்க்காமல் செய்து கொள்கிறார்களே? ஒரு சில தம்பதியினர் சக்ஸஸ் ஆகவும் வாழ்ந்துள்ளனரே ...எ ன கேட்கலாம். ஆமாங்க.. ஆமா எல்லாமே மனம் சம்பந்தப்பட்டது.
பெற்றோர்கள் பார்க்கும் திருமணத்திற்கு கூட அவர்கள் ஜாதகம் ஜோசியம் பார்த்தாலும் கல்யாணத்திற்கு தயாராக உள்ள பெண், மற்றும் கல்யாணத்திற்கு தயாராக உள்ள ஆண் ஆகிய இருவரின் மனப்பொருத்தம் தாங்க முக்கியம். அந்த வகையில் மனதிற்கு பிடித்திருந்தால் மற்றது எல்லாம் அதன் பிறகுதாங்க. இப்ப புரியுதா...காதல்திருமணங்கள் எப்படி சக்ஸஸ் ஆகிறது. காதலிக்கிறதே மனசுக்கு புடிச்சவங்களைத்தானே காதலிக்கிறாங்க...
கல்யாணத்திற்கு ஒரு சிலர் பெயர் பொருத்தம் மட்டும் பார்த்து செய்கின்றனரே அது எப்படி? என கேட்கிறீர்களா? அது என்னவென்று பார்ப்போமா?
ஒவ்வொரு எழுத்திலும் துவங்கும் பெயருக்கு ஒரு ஜோதிடக் கணிப்பு இருக்கும் (கோப்பு படம்)
ஜாதகம் கணிக்க வேண்டும் என்றாலே பிறந்த தேதி, நேரம், நட்சத்திரம் போன்ற விபரங்களைக் கொடுத்தால்தான் புதிய ஜாதகத்தினைக் கணிக்க முடியும் என்று சொல்வார்கள். ஆனால் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைத் தெரியாதவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? பெயரை மட்டும் பதிவு செய்து அதன் மூலம் பொருத்தம் பார்த்து திருமணத்தினை முடிப்பவர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெயர் பொருத்தத்தில் ஜாதகத்தில் பார்ப்பதை விட இன்னும் விபரமாக நாம் கணிக்கலாம். அதாவது பெயர் பொருத்தம் பார்ப்பது என்பது வேத ஜோதிடத்தின் அடிப்படையானது. ஜாதகத்தினை முழுமையாக கணக்கிட்ட பின்னர் அது பார்க்கப் போகும் பெண்ணின் ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் பின்னர் முடிவைத்தரும்.
எனது இல்லத்தின் இல்லத்தரசியாக வரும் மணப்பெண்ணுக்கு நிறைந்த அட்சதையாக அரிசியை வழங்கும் மணமகன் (கோப்பு படம்)
ஜாதகத்தினை பெயருக்கு ஏற்ப பொருத்துவதால் உங்களைப் பிடித்த தோஷக் குறைபாடுகள், அனைத்தும் நமக்கு தெளிவாக தெரியவரும்.தமிழகத்தினைப் பொருத்தவரை அனைவருமே ஒரு குழந்தை புதியதாக பிறக்கிறது என்றால் உடனே அதன் நேரம், நாள், நட்சத்திரத்தினைக் குறித்து வைத்துவிடுவது வழக்கமாக வைத்துள்ளனர். காரணம் பிற்காலத்தில் அதனை வைத்துதான் அந்த பிள்ளையின் ஜாதகத்தினைக் கணிக்க வேண்டும் என்பதால் அனைவரும் இதில் உறுதியாக இருப்பார்கள்.
ஆனால் ஜோதிட சாஸ்திரப்படி பெயர் பொருத்தம் என்பது விசேஷமானதாக கருதப்படுகிறது. இது அவ்வளவு துல்லியமாக இருக்குமா? எல்லா விஷயங்களும் நிறைந்த ஜாதகத்தினை ஒப்பிடுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என பல ஆயிரம் சந்தேகங்கள் உங்கள் மனதில் எழலாம். அக்காலத்தில் பிறக்கும் போது விபரங்களை சரியாக எழுதி வைக்காதவர்கள் நிலைமை என்ன ஆகும் என யோசித்துப் பாருங்கள்? இதுபோன்ற ஒரு வாய்ப்பு இருப்பதால் அவர்கள் அந்த வழிமுறைகளைக் கையாண்டு திருமணத்தினை முடித்துவிடுகின்றனர்.
பெயரின் படி ஜாதகத்தினை எப்படி பொருத்தலாம் என்றால் நட்சத்திர கூட்டங்களின் படி ஆண், மற்றும் பெண் ஆகிய இருவரின் குணங்களையும் பொருத்துவதாகும். ஆண்,பெண் இருவரின் பெயரை வைத்து அவர்களின் குணங்கள் எத்தனை பெறுகின்றன என்பது கண்டறியப்படுகிறது. கணக்கீட்டின் படி 36 குணங்களைப் பெறுவது திருமணத்திற்கு நல்ல ஒரு துவக்கமாக கருதப்படுகிறது.
நீ என் மனைவியாகி விட்டாய் இனி நான் உன்னை எந்த சூழலிலும் கைவிடமாட்டேன்...என்ற பந்தப் பிணைப்பு (கோப்பு படம்)
ஒரு நபர் ஜாதகத்தை பெயருடன் பொருத்தும்போது, சில சூழ்நிலைகளில் செய்யப்படும் கணக்கீடு முற்றிலும் சரியானதல்ல. அத்தகைய சூழ்நிலையில், இரண்டு சூழ்நிலைகள் ஏற்படுகின்றன, முதலில், பிறந்த நேரத்தை கணக்கிடுவதன் மூலம் உங்கள் பெயர் கணக்கிடப்பட்டது மற்றும் இரண்டாவதாக, அந்த நேரத்தில் நீங்கள் இதே போன்ற பிடித்த பெயரைக் கொண்டிருப்பீர்கள்.
அக்கால வழக்கப்படி ஒருவரது வீட்டில் குழந்தை பிறந்துவிட்டால் அவரது குடும்ப ஜோதிடர்கள் அல்லது பண்டிதர்கள் மூலம் குழந்தைகளுக்கு பெயரிட்டனர். ஜோதிடமானது குழந்தையின் பெயரின் முதல் எழுத்தினை பிறந்த நேரத்திற்கு ஏற்ப சொல்லும். இதிலிருந்து குழந்தையின் பெயர் கண்டறிந்து வைக்கப்பட்டது.
ஆனால் இக்காலத்தில் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளை இவர்களே நல்ல நேரத்தில் பிறக்க முயற்சிக்கிறார்கள். அதுமட்டும்அல்லாமல் குழந்தை பிறப்பதற்கு முன்பே பெயரினை தயார் செய்துவிடுகிறார்கள். இதுபோன்ற முரண்பாடுகள் இருப்பதால் பெயர் பொருத்தமும் சில நேரங்களில் துல்லியமாக அறிய முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது.
எடுத்துக்காட்டாக உங்கள் குழந்தை பிறந்த நேரத்தின்படி உங்கள் குழந்தையின் பெயர் ''டி'' என்ற முதல் எழுத்திலிருந்து வந்துள்ளது. ஆனால் இவர்கள் பெயர் வைக்கும் போது ''எஸ்''என்ற எழுத்தில் வைத்துள்ளனர்.இதுபோன்ற முரண்பாடுகள் எதிர்காலத்தில் தனது ஜாதகத்தினை அந்த குழந்தை பார்க்கும்போது முற்றிலும் தவறான பலனைத்தான் பெறும். ராசியின் அடிப்படையில் முதல் எழுத்தில் பெயரிடப்படாமல் வேறு பெயர் வைத்ததால் வந்த வினைதான்இது. பெயரானது ராசியின் அடிப்படையில் சரியாக வைக்காவிட்டால் முடிவுகள் எதுவும் சரியாகவே அமையாது.
இதுபோன்ற பெயர் பொருத்தம் பார்க்கும் கருவியானது தற்காலத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
பிறந்த நேரம் தெரியவில்லை என்றால் நீங்கள் பெயரைப் பயன்படுத்தலாம் ஜாதகத்தினைப் பெயரால் பொருத்தம், மணமகன், மணமகளின் வீட்டில் ராசியில் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதன் மூலம் சந்திரனின் பண்புகள் அறியப்படுகின்றன. இதிலிருந்து பெறப்பட்டமுடிவுகள் அனைத்துமே திருமண வாழ்க்கை மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு சிறந்த வகையில் உதவி புரியக்கூடியதாக இருக்கும்.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்ற நோக்கில் ஒரு சில குடும்பத்தினர் பரந்த நோக்கில் திருமணத்தினை ஓகே செய்துவிடுகின்றனர். இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள், இது சரியில்லை, அது சரியில்லை, என சொல்லி, சொல்லி நாளைக் கடத்துவதால் அந்த பெண்ணிற்கோ, பையனுக்கோ திருமணமானது தள்ளிக்கொண்டே போகிறது. அதுவும் உறவுகளைக் கேட்டீர்கள் என்றால் அவ்வளவுதான் முடிஞ்சே போயிடும். ஆளாளுக்கு ஒரு கருத்து...திருமணத்தினைப் பொறுத்தவரை பெற்றவர்கள் எடுக்கும் முடிவே இறுதியான முடிவாக இருக்க வேண்டும்...
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2