Mind Stress Quotes in Tamil மன அழுத்தமா? ரிலாக்ஸ் பாஸ்.
மன அழுத்தத்தை நாம் எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கையில் இறுதி மாற்றத்தை ஏற்படுத்துகிறது.;
நாம் யாராக இருந்தாலும், வாழ்க்கையில் என்ன செய்தாலும், மன அழுத்தம் எப்போதும் நம்மைத் தேடி வரும். ஆனால் அந்த மன அழுத்தத்தை நாம் எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கையில் இறுதி மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
மன அழுத்த மேற்கோள்களின் சமீபத்திய தொகுப்பு, உங்கள் மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிக்கத் தேவையான அடித்தளத்தை உங்களுக்கு வழங்கும், இதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் அதிக நன்மைகளைப் பெற முடியும்.
நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், வாழ்க்கை சில நேரங்களில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
சில நேரங்களில் நாம் நிதி பின்னடைவுகள், உடல்நலப் பிரச்சினைகள், பணியிட சவால்கள் மற்றும் அனைத்து வகையான சிரமங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். ஆனால் நாம் எந்த மன அழுத்தத்தை அனுபவித்தாலும், அது நம்மை நொறுக்குவதை அனுமதிக்க முடியாது.
மனதளவில் வலிமையானவர்களைப் போலவே, எந்த கூடுதல் பதற்றத்தையும் பொருட்படுத்தாமல் நாம் செழிக்க முடியும்.
மன அழுத்தத்தை திறம்பட கையாளுவதற்கு, மன அழுத்தம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், எல்லாவற்றையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதை ஏற்றுக்கொண்டு நேர்மறையான அணுகுமுறையை பராமரிக்க வேண்டும்.
நாம் நம் மன அழுத்தத்தை முன்னோக்கி வைக்க வேண்டும், எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களுடன் மாற்ற வேண்டும் மற்றும் நமது சாதனைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பெருமைப்பட வேண்டும்.
மன அழுத்தம் ஏற்படும் போது, உங்கள் மகிழ்ச்சியான நிலைக்குத் திரும்புவது மிகவும் சவாலாக இருக்கும். நீங்கள் மீண்டும் அங்கு செல்வதற்கு உதவ, இங்கே சில உத்வேகம் தரும், புத்திசாலித்தனமான, மற்றும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு மேற்கோள்கள் மற்றும் சொற்கள் உள்ளன.
மனிதன் மரணத்தை மறந்தாலும்,
மரணம் மனிதனை மறப்பது இல்லை.
ஆகவே, மரணம் நெருங்கும் வரை
மனித நேயத்துடன் இருப்போம்.
வரலாற்றில் வெற்றி பெற்றவனும் இடம் பெறலாம்
தோல்வி அடைந்தவனும் இடம் பெறலாம்
ஆனால் வேடிக்கை பார்த்தவன்
ஒரு நாளும் இடம் பெற முடியாது.
கஷ்டத்தை கொடுத்தவனுக்கு
கஷ்டத்தை கொடுக்காதே.
நீ அனுபவித்ததை தானே
அவனும் அனுபவிக்க வேண்டும்.
விட்டு விடு நண்பா! புரிய முடிந்தால்
புரிந்து கொள்ளட்டும்....!
அஞ்சிக்கொண்டும் வாழாதே.
கெஞ்சிக்கொண்டும் வாழாதே.
உனக்கான வாழ்கையை வாழ்..!
வாழ்க்கையில்
நடக்கும் துன்பங்களை
கடந்து போக கற்று கொள்ளுங்கள்
ஆனால் மறந்து போய்விடாதீர்கள்
அது தான் உன் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும்.
எவ்வளவு கோபம் வந்தாலும்
வார்த்தைகளை விட்டு விடாதீர்.
விழும் அடிகள் தரும் வலியை விட
வார்த்தை தரும் வலிகள் அதிகம்.
எதற்காகவும் தன்மானத்தை
இழக்காதே..!!
உனக்காக தன் மானத்தையே
இழப்பவரை..!!
எக்காலத்திலும் இழந்துவிடாதே..!!
உண்மையில்லாத அன்பு,
ஏமாளியாக்கி விடும்.
காரணமில்லாத சினம்,
கோமாளியாக்கி விடும்.
வாழ்க்கையில ரெண்டு விஷயம்
பண்ண கூடாது.
ஒன்று அதிகமா யாரையும்
நேசிக்க கூடாது.
இரண்டு யாரையும் அதிகமாக
நம்ப கூடாது.
பிறரை பற்றி குறை கூறும் முன்னர்
நான் அவர் இடத்தில் இருந்தால்
சரியாக நடந்து இருப்போமா
என்று யோசித்து பாருங்கள்
அதன் பின்னர் உங்கள் மனம் சொல்லும்
அவரை விமர்சிக்க உனக்கு தகுதி இருக்கிறதா என்று!!
தோல்வியால் துவண்டவனுக்கு
உதவ முடிந்தால் உதவு.
முடியவில்லை என்றால் அப்படியே
விட்டு விடு.
அவனே அவனை தேற்றிக் கொள்வான்.
அறிவுரை சொல்லி கொலை செய்யாதே.
ஒருவருக்கு நீ ஆயிரம் உதவி செய்து இருக்கலாம்
ஆனால்ஒரு தடவை உன்னிடம் குறை கண்டுவிட்டால்
அந்த கணத்தில் நீ செய்த உதவிகள்
அனைத்தையும் மறந்து விடுவான்
இதுதான் இந்த உலகம்.
சிலரை மன்னித்து விடுங்கள்
சிலரை மறந்து விடுங்கள்
சிலரை வெறுத்து விடுங்கள்
யாரையும் தூக்கி சுமக்காதீர்கள்
உங்கள் வாழ்க்கையே சுமையாகிவிடும்
நீ இந்த உலகத்தில் சாதிக்க
வேண்டும் என்றால்,
இன்பத்தையும் துன்பத்தையும்
சரிசமமாக ஏற்றுக்கொள்..!
புரியாதவர்கு புரிய வைக்க முயற்சிக்காதே.
அமைதி கொள்.
அமைதியாய் இருப்பதால்
நமக்கு நஷ்டம் ஒன்றும் இல்லையே!
செயலில் 'நாணயமும்'
பேச்சில் 'நா' நயமும்
இருந்து விட்டால்
நல்லனவெல்லாம்
தானே தேடி வரும் நம்மை.
வாழ்வில் மறக்க வேண்டியது.
உங்களுக்குப் பிறர் செய்த தீமை,
நீங்கள் பிறருக்கு செய்த நன்மை.
தேவைக்காக மட்டுமே வருபவர்கள்.
நமக்கு தேவையே
இல்லாதவர்கள்.
அறிவுரை கேட்டு பின்
திருந்தும் மனிதர்களை விட,
அடிபட்டு பின் திருந்தும்
மனிதர்களே அதிகம் இங்குஅதிகம்
எல்லா தத்துவங்களும் இளமையிலேயே
வாசிக்க கிடைக்கிறது. ஆனால்,
முதுமையும் அனுபவமும் தான்
அதன் உள் அர்த்தத்தை உணர்த்துகிறது.