Ignore quotes in tamil: புறக்கணிப்பு குறித்த 50 மேற்கோள்கள்!
வாழ்க்கை என்பது தொடர்ச்சியான தேர்வுகளின் தொகுப்பு. சில சமயங்களில், நம் மன அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும், நாம் சில விஷயங்களை, சில உறவுகளை, சில எதிர்மறை எண்ணங்களைப் புறக்கணிக்க வேண்டியது அவசியம்.
வாழ்க்கை என்பது தொடர்ச்சியான தேர்வுகளின் தொகுப்பு. சில சமயங்களில், நம் மன அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும், நாம் சில விஷயங்களை, சில உறவுகளை, சில எதிர்மறை எண்ணங்களைப் புறக்கணிக்க வேண்டியது அவசியம். எதிர்மறை ஆற்றலையும் நச்சுத்தன்மை வாய்ந்தவர்களையும் விலக்கி வைப்பது மூலம் உங்கள் உண்மையான திறனை அடைவீர்கள்.
- "புறக்கணிப்பதும் ஒரு கலை... தேவைப்படும் போது கற்றுக் கொள்."
- "அமைதியே சில சமயங்களில் சிறந்த பதிலாக இருக்கும்."
- " உன்னை காயப்படுத்தும் விஷயங்களுக்கு செவி கொடுக்காதே"
- "எதிர்மறை மனிதர்களின் ஆற்றலை உறிஞ்சி உன்னை அழித்துக் கொள்ளாதே."
- "சில வாதங்களை வெல்வதை விட, அதில் பங்கேற்காமல் இருப்பதே மேல்."
- "சில விஷயங்கள் உன் கவனத்திற்கு தகுதியற்றவை."
- "யார் மீதும், எதன் மீதும் அதிகம் அக்கறை கொண்டாயோ, அவர்களிடமிருந்தே உனக்கு அதிக காயம் வரும்."
- "அவர்களின் அளவுக்கு இறங்கிச் சென்று, அவர்களிடம் வாதம் செய்யாதே."
- "உனக்கு தேவைப்படாத நாடகங்களை (drama) உன் வாழ்வில் வரவேற்காதே."
- "கவனம் சிதற வைப்பவர்களிடமிருந்து உன்னை விலக்கிக் கொள்."
- "பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்து. அவர்களின் கருத்துக்கள் உன் வாழ்க்கையை வரையறுக்காது."
- "பேருக்கு தான் வாழ்கிறேன் என்கிற மாதிரி வாழாதே... உனக்காக வாழக் கற்றுக்கொள்"
- "நீ நடக்கும் பாதையில் கற்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றை அப்புறப்படுத்தி விட்டு நடப்பதா, அல்லது அந்த கற்களிலேயே முடங்கி போவதா என்பதை நீ தான் முடிவு செய்ய வேண்டும்"
- "உனக்கு மதிப்பளிக்காமல் உன்னை பயன்படுத்த நினைப்பவர்களிடம் இருந்து விலகி நட."
- "உன் நேரமும் சக்தியும் விலைமதிப்பற்றவை. அவற்றை வீணாக்காதே."
- "உன் எல்லைகளை வகுத்துக் கொள், அவற்றை காப்பாற்று."
- "மற்றவர்களின் எதிர்மறையை உன் வாழ்க்கைக்குள் அனுமதிக்காதே"
- "உன் வாழ்க்கையின் கதைக்கு நீ தான் நாயகன், பிறரை இயக்குனராக இருக்க விடாதே"
- "பிறரை மாற்ற முயற்சிக்காதே... உன்னை நீ மாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்து."
- "சிலருடைய கருத்துக்கள் காதில் விழக்கூடாது... தேவையில்லாதவை."
- "உன் எண்ணங்களையும் செயல்களையும் நீ மட்டுமே கட்டுப்படுத்த முடியும்... அதில் கவனம் செலுத்து."
- "எதிர்மறையான வார்த்தைகளை உன்னை துளைக்க அனுமதிக்காதே."
- "பிறர் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அதிக நேரம் செலவிடாதே. அதற்கு பதிலாக நீ எப்படி நடத்தப்பட விரும்புகிறாயோ, அதை நிர்ணயித்து அதற்கேற்ப செயல்படு."
- "புறக்கணிப்பது என்பது பலவீனம் அல்ல. அது உன் மன அமைதிக்கு நீ செய்யும் முதலீடு."
- "நீ புறக்கணிக்கத் தேர்வுசெய்வதெல்லாம் உன்னை பின்னுக்கு இழுக்கும் விஷயங்களாக தான் இருக்கும்."
- "சிலரைப் புறக்கணிப்பது சுயநலம் அல்ல. அது சுய பாதுகாப்பு."
- "மற்றவர்களின் ஒப்புதலுக்காக உன் மகிழ்சியை தியாகம் செய்யாதே."
- "வார்த்தைகள் காயப்படுத்தும். ஆனால் அமைதி ஆற்றும்."
- "உன் நிம்மதியை விட முக்கியமானது எதுவுமில்லை."
- "உன்னைக் குறைத்து மதிப்பிடுபவர்களை புறக்கணித்து விடு"
- "அமளி ஏற்படுத்துபவர்களுடனான உரையாடல், இரு தரப்புக்கும் அழிவையே தரும்"
- "உன்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லாத எதையும் விட்டுவிடு."
- "எதிர்மறை நபர்களை புறக்கணிப்பது உனக்கே நீ செய்யும் மிகப்பெரிய உதவி."
- "சில நேரங்களில் 'கண்டுகொள்ளாமல்' இருப்பது உன்னை 'காப்பாற்றி கொள்ள' உதவும்."
- "எப்போதும் உனக்கு எதிராகவே செயல்படுபவர்களிடம் நேரத்தை வீணாக்காதே."
- "உன் மன அமைதிக்கு எது குந்தகம் விளைவிக்கிறதோ அதை புறக்கணி "
- "சில உறவுகளுக்காக போராடுவதை விட, அவற்றை விட்டு விலகுவதே நல்லது."
- "உன் மனதை ஆக்கிரமிக்கும் நச்சு எண்ணங்களை புறக்கணிக்க கற்றுக்கொள்."
- "உனக்கு மதிப்பளிக்காதவர்களை மதிக்க நேரம் செலவிடாதே."
- "வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்களிடம் "இல்லை" சொல்லக் கற்றுக்கொள்."
- "சிலரை மன்னிப்பதை விட, மறந்துவிட்டு முன்னேறுவதே நல்லது."
- "புறக்கணிப்பது சிறந்த பழிவாங்கலாக இருக்கும் சில நேரம்."
- "எது அமைதியை தருகிறதோ, அதுவே சரியான பாதை."
- "உன் கனவுகளுக்கு ஆதரவளிக்காதவர்களைத் தவிர்த்து விடு."
- "வம்பு, வதந்தி, சண்டை சச்சரவுகள்... இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதே மேல்."
- "சரியானவர்களை கண்டறிய, தவறானவர்களை விலக்கி வை."
- "உன் எல்லைகளை மதிக்காதவர்களுக்கான இடம் உன் வாழ்வில் இல்லை."
- "உன் குறிக்கோளும் வளர்ச்சியும்தான் முக்கியம், திசைதிருப்பல்கள் அல்ல."
- "மற்றவர்களை மாற்றுவதற்கான நேரத்தை, நீ உன்னை மேம்படுத்திக் கொள்வதில் செலவிடு."
- "உன் சொந்த ஒளியை மங்கச் செய்ய யாருக்கும் அனுமதி கொடுக்காதே"
ஞாபகம் வை: புறக்கணிப்பதுன்பது சிலருக்கு நம்மை பழிவாங்குவதாக தோன்றலாம். ஆனால், உண்மையில் இது நம் சொந்த ஆற்றலைப் பாதுகாத்துக் கொள்ளவும், நேர்மறையான திசையில் முன்னேறவும் நாம் எடுக்கும் ஒரு முக்கியமான முடிவு.