போலி அன்பு.... வலிமிகுந்த வாசகங்கள்... இதோ படிங்க....

Fake Love Quotes in Tamil-போலி அன்பு.... வலிமிகுந்த வாசகங்கள்...

Update: 2022-09-12 10:09 GMT

Fake Love Quotes in Tamil


Fake Love Quotes in Tamil-அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் எங்கே....ஆ...ஆ.. என்ற பாடலை கேட்டிருப்பீர்கள். நாம் அன்பால் தேடினாலும்அது கடைசியில் வில்லங்கத்தில்தான் கொண்டு போய்விடுகிறது உண்மையான அன்பு என்பது ஆத்மார்த்தமானது. இது உள்ளத்தில் உறைந்து போனது. இது உண்மையான உறவுகளில் மட்டுந்தான் இருக்கும். ரத்த பாசம் உள்ளவர்களிடத்தில் மட்டுமே காணப்படும். போலி அன்புஎன்பது ஆத்மார்த்தமானது அல்ல. அது அவ்வப்போது பச்சோந்தி போல் நிறத்தினை மாற்றிக்கொள்ளும்.

இன்று சமூகத்தில் போலி களின் நடமாட்டமானது அதிகரித்துகாணப்படுகிறது. முன்பெல்லாம் பொருட்களில் மட்டுமே இருந்த போலி நாளடைவில் பரவி அனைத்திலும் போலியாகி விட்டது.ஒரு சிலர் இருக்கிறார்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்களுக்குகாரியம் ஆக வேண்டும் எனில் உங்களுடனே ஒட்டிக்கொண்டே யிருப்பார்கள். அதுவரை உங்களிடம் இனிக்க இனிக்க பேசுவார்கள். பின்னர் காரியம் ஆன பின்னர் உங்களை அவர்கள் ஏன் கண்டுகொள்கிறார்கள்?- நீங்கள் யார்? என கேட்பார்கள். இதுதான் இன்றைய உலகமாக உள்ளது.

அக்காலத்தில் போலி என்பது அனைத்திலும் குறைந்து காணப்பட்டது. ஆனால் ஆசை அதிகமானதாலும், உழைக்காமல் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் அதிகமாகிவிட்டதாலும்,ஆடம்பர பொருட்களின் மேல் ஆசை அதிகம் வந்ததால் பணத்தின் தேவை அதிகரிக்க துவங்கிவிட்டது. யாரை ஏமாற்றலாம்? என ஒரு கும்பல் தினமும் அலைந்துகொண்டுதான்இருக்கிறது. தினந்தோறும் ஏதாவது ஒரு போலியை போலீசார் கைது செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அன்பில் போலியாக நடிப்பவர்களை இனங்காண முடியவில்லையே? இவர்களை யாராலும் அரெஸ்ட் செய்யவே முடியாதுங்க... அதுபோல்இனிக்க இனிக்க பேசி காரியத்தினை சாதித்துக்கொண்டு கழட்டிவிடுவோர் இந்நாட்டில் அதிகரித்துவிட்டனர். நாம்தான் இவர்களிடம் உஷாராக இருக்கவேண்டும்.

அதேபோல் போலிகாதலர்களும்அதிகரிக்க துவங்கிவிட்டனர்.முன்பெல்லாம்காதலில் உண்மைத்தன்மை இருந்தது. இரு மனங்கள் ஒன்றுபட்டு காதல் நடந்தது. ஆனால் தற்போது இனக்கவர்ச்சிக்காக போலியாக காதலிப்பது போல் நடித்து பின்னர் தன் ஆசை நிறைவேறியவுடன் அவர்களை கழற்றி விட பார்ப்பவர்களே ஏராளம்.இளம்பெண்கள் ஏமாந்த கதை எத்தனை செய்திகளாக வந்துள்ளது. காதலர்கள் வீட்டு முன் தர்ணா செய்யும் இளம்பெண்களின் எண்ணிக்கை அவ்வப்போது காண முடிகிறது? இவையெல்லாம் ஏன் போலி பச்சோந்திகள் அதிகரிப்பே காரணம்... நாம்தான் உஷாராக இருந்து உண்மையை தேடவேண்டும்... இதற்கான வாசகங்கள் இதோ... படிங்க...

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாமல், உண்மை முகத்தை எப்போதும் காட்டு போலி வேடம் நிலையானதல்ல!

கண்மூடித்தனமாக ஒருவரை நேசித்து விட்டால் அவர்கள் சொல்லும் பொய்கள்கூட உண்மையாகவே தெரிகிறது

ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்க ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்

முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு அவசியமில்லை. அதிக அன்போடு இருந்தாலே கிடைத்துவிடும்

அலட்சியங்களை சகித்துக்கொள்வதை விட நிராகரிப்பை ஏற்றுக்கொள்வது எவ்வளவோ மேல் பணம்,புகழ்என்று எவ்வளவு இருந்தாலும் பெரியவர்களை மதிக்க தெரியாதவன் பிணத்திற்கு சமம்

பொய்களை எளிதாக நம்பும்இந்த உலகம் .. உண்மையை நிரூபிக்க ஆதாரம் கேட்கும் நீ கேட்டு வாங்கும் அன்பு கடைசி வரை வருவதில்லைஉண்மையான காதலனுக்கு கிடைத்த பரிசு, துரோகி என்ற பெயர் மட்டுமே கட்டாயத்தினால் காட்டப்படும் அன்பு கண்டிப்பாக நிலைக்காது

சில உறவுகள் நம்முடன் இருப்பதைவிட விலகிச்செல்வதே சிறந்தது ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள். ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாகிவிடாதீர்கள்.

நாம் சில நேரங்களில் காட்டும் உண்மையான அன்பு போலியாக நேசிப்பவர்களை காட்டி கொடுத்துவிடுகிறது

இன்றுபழகுவர் நாளை விலகுவர் உறவு தொடங்கும் முன்பே பிரிவிற்கும் தயாராகிக்கொள்.

அளவோடு பழகணும் எல்லைகள் தெரிந்திருக்கணும் என்பதெல்லாம் தெருவில் வீசப்பட்ட பின்னர்தான் அறிவுக்கு தெரிய வரும்.

தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்புஇருக்கும். சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான்பாசம் இருக்கும்.

சிரிப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள். அழுவதற்கு உடன் இருப்பவர்கள் கற்றுக்கொடுப்பார்கள்.

முகத்திற்கு முகமூடி போடுபவர்களைவிட அகத்திற்கு முகமூடி போடுபவர்கள் அதிகம்தான்.

எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்சவங்க ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க... நமக்குதான் எவ்வளவு பட்டாலும் புரியறது இல்ல.

சில உறவுகளால் வாழ்க்கை துளிர்விடுகிறது. சில உறவுகளால் வாழ்க்கை துவண்டு விடுகிறது!

அத்தனை அன்பும் பொய் தான் என்று தெரிய வரும்போது, அத்தனை நாள் பழக்கமும் அரை நொடியில் அர்த்தமற்று போகிறது!

நிஜத்தை விட நிழல்கள் எப்போதும் அழகாகத்தான் இருக்கும்! நிழலை நம்பி, நிஜத்தை தொலைத்து விடாதீர்கள்!

வேஷத்துக்கு கிடைக்கும் மதிப்பு கூட, பாசத்துக்கு கிடைப்பது இல்லை!

கருவேலம் மரம் கூட "என்னிடம் முட்கள் உள்ளது. தொட்டால் குத்திவிடும்!" என்று காட்டுகிறது. ஆனால் சிலர் நண்பர்கள் போல பழகி குத்தி விடுகின்றனர்!

எப்போதும் ஒரே மாதிரி உண்மையாக இருப்பவர்களை விட, ஆட்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றார் போல் மாறுபவர்களையே இந்த போலி உலகம் பெருமையாக ஏற்றுக் கொள்கிறது!

வேஷமிட்டு பாசம் காட்டும் உறவுகளிடம், பழக தெரிவதில்லையோ? நடிக்க கற்றுக் கொள்!

அனைவரையும் நம்பு! ஆனால், எல்லா நேரங்களிலும் நம்பாதே!

எந்த உறவும் கடைசி வரையில் நிலைக்காது என்று தெரிந்து கொள்ளும்போது, வாழ்க்கையில் அமைதிக்கான விடை கிடைத்து விடுகிறது!

சிலரது வேடங்கள் கலைந்த பின், நாடகம் முடிந்துவிடுகிறது, ஏமாற்றத்துடன்!

துரோகிகள் மீது நம்பிக்கை வைத்ததற்காக வருத்தப்படாதே! நீ வைத்த நம்பிக்கை தான் துரோகிகளை உனக்கு அடையாளம் காட்டுகிறது!

உன் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி கொள்பவர்களை விட, பொறாமை உடையவர்களே அதிகம்!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News