ரசித்து ருசித்து சாப்பிடும் முட்டை பராத்தா செய்வது எப்படி?
Egg Paratha Recipe-உங்களது வீட்டில் 3 முட்டையும், சப்பாத்தி மாவும் இருந்தால், பிள்ளைகள் விரும்பி சாப்பிடும் முட்டை பராத்தாவை உடனடியாக தயார் செய்து விடலாம்.;
Egg Paratha Recipe- முட்டை பராத்தா செய்முறை (கோப்பு படம்)
Egg Paratha Recipe - காலையில் ஒரே மாதிரி இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கும், குழந்தைகளுக்கும் சத்தான ஒரு காலை உணவை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 3 முட்டையும், சப்பாத்தி மாவும் உள்ளதா? அப்படியானால் அந்த முட்டையைக் கொண்டு முட்டை பராத்தாவை செய்து கொடுங்கள். இந்த முட்டை பராத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு முட்டை பராத்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பராத்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
* தண்ணீர் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு..
* முட்டை - 3 (வேக வைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த முட்டைகளை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், சீரகத் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு ஸ்பூன் கொண்டு கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கையால் நன்கு ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* பிறகு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் ஆனதும், பிசைந்த மாவை உருண்டைகளாக பிரித்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்திக்கு தேய்ப்பதை விட மெலிதாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் நடுவே முட்டை மசாலாவை ஒரு 2 ஸ்பூன் வைத்து, ஒரு பாகத்தில் அரை வட்ட அளவிற்கு பரப்பி விட வேண்டும். பின் அதை அப்படியே மடித்து விட்டு, முனைகளை கைகளால் ஒருமுறை அழுத்தி விட வேண்டும்.
"அதன் பின் ஒரு ஃபோர்க் கரண்டியால் முனைப் பகுதியை அழுத்தி விட வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து, தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்து வைத்துள்ளதை ஒவ்வொன்றாக போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை பராத்தா தயார்.