நம்பாதீங்க..... நம்பிக்கை துரோகிகளை .... இதற்கான வாசகங்கள் ,,, படிச்சு பாருங்க...

Yaraiyum Namba Kudathu Quotes in Tamil-யாரையும் நம்பாதீங்க... நம்பி மோசம் போகாதீங்க.,. நம்பவேண்டியவர்களை மட்டுமே நம்புங்க...எல்லோரையும் நம்பினா பிரச்னைதாங்க... பார்த்து யோசிச்சு செய்யுங்க...

Update: 2022-09-17 09:31 GMT


Yaraiyum Namba Kudathu Quotes in Tamil-வாழ்க்கையே நம்பிக்கையில்தாங்க ஓடுது.ஆனால் ஒருசிலர் அந்த நம்பிக்கைக்கே உலை வைக்கும்போதுதான் மனம் வேதனைப்படுகிறது. நம்பிக்கையானவர் என நாம் அவருடன் பரிவர்த்தனை வைத்துக்கொண்டுள்ளபோது ஒருசில பிரச்னைகளை திடீரென்று அவரே உருவாக்குவார். அப்போதுதான் நமக்கு அவருடைய உண்மை முகம் தெரியவரும். இதுபோன்ற நேரங்களில் நம்பிக்கையானவர் என்ற பெயரானது அடிபட்டு விடும்.ஏங்க வாழ்க்கையிலே நாம ஒரு நாளைக்கு பலதரப்பட்ட மனிதர்களோடு பேசுகிறோம்.. பழகுகிறோம்.. அவையெல்லாம் புது உறவுகளாக கூட இருக்கலாம். ஆனால் நமக்கு பிறந்தது முதல் தற்போது வரை தெரிந்தவர்கள் நம்மை முதுகில் குத்தும்போதுதான் நமக்கு நிறைய வலிக்கிறது... அது காலத்தினால் நம் மனதில் ஏற்பட்ட வடுக்களாக பதிந்து விடுகிறது.

நம்பிக்கை துரோகம் என்பது எங்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். ஆனால் அதை நமக்கு தெரிந்தவர்களே நமக்கு செய்யும்போது நிஜமாகவே நமக்கு வலி அதிகமாகிறது. இதுமட்டும் அல்ல உறவுகளும்இதுபோன்ற அநாவசிய செயல்களில் ஈடுபடும்போது மனசு வலிக்கத்தான் செய்கிறது. நம்பியவர்கள் நம்மை மோசம் செய்யும்போது மனம் என்ன சந்தோஷத்திலேயே மிதக்கும்... மனமானது பெரும் உளைச்சலுக்குஆளாகிவிடுகிறது. இதுபோன்ற சம்பவங்களால்...

யாரையும் நம்பாதே ... பொன்மொழி வாசகங்கள்....

எதிரியை கூட நம்பு ஆனால் உறவுகளை நம்பாதே ஏனென்றால் எதிரி கொடுக்கும் வலியை விட உறவுகள் தரும் வலியே வலிமை வாய்ந்தது

நம் சமூகத்தில் ஏன் என்று கேட்பவன் ஏமாளி ஆம் என்றுசொல்பவன் அறிவாளிதவறு செய்தவர்களை மன்னித்துவிடு.ஆனால் அவர்களை மீண்டும் நம்பும் அளவுக்கு முட்டாளாக இருக்காதே

என்னை தொலைத்தவர்களை நான் ஒரு போதும் தேடியதில்லைபழகும் உறவுகள் அடித்தால் வலிக்காது...நடித்தால் வலிக்கும்.

யாரை நம்பினாலும் நம்புங்க..நானிருக்கிறேன் நான் பாத்துக்கிறேன்

சொல்றவங்களை மட்டும் நம்பவே நம்பாதீங்க.. ஏன்னா நம்பள கழட்டிவிட்டுட்டு வேடிக்கை பாக்குற முதல் ஆளு இவங்கதான்

யாரிடமும் அதிகம் எதிர்பார்ப்பு வைக்காதே ஒன்று துாக்கி எறியப்படுவாய்... அல்லது ஏமாற்றப்படுவாய்..

ஒரு முறை ஏமாற்றிய ஒருவர் மறுமுறை ஏமாற்றாத போதும் மனம் ஏனோ அவரை உண்மை என ஏற்க மறுக்கின்றது.

ஒருவரை கண்மூடித்தனமாக நம்பியதால்தான்.. பல இரவுகள் கண் மூட முடியாமல் போகிறது நம் வாழ்க்கை

அளவிற்கு அதிகமான அன்பு பிரமிக்கப்பட்டு பின் ரசிக்கப்பட்டு தொல்லையாகி சலிக்கப்பட்டு இறுதியில் உதாசீனப்படுத்தப்படுகிறது

வலிகளை தரும் உறவு வேண்டாம் ஆறுதல் தரும் தனிமையே போதும்

மன்னித்துவிடுங்கள் உங்களை ஏமாற்றியவர்களை ஆனால் மறந்தும் கூட நம்பி விடாதீர்கள் மறுபடியும் அவர்களை

தெரிந்தே தவறு செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே.. அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த பல பதில்களை வைத்திருப்பார்கள்.

என்னை நீங்கள் முட்டாள் என்று கூறுவதற்காக நான் வருந்தவில்லை

முட்டாள் ஏமாறுவானே தவிர ஏமாற்ற மாட்டான்.

யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்க..

இல்லையெனில் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க மாட்டீர்கள்.

நம்பிக்கைநிறைந்த ஒருவர்யார் முன்னேயும்எப்போதும்மண்டியிடுவது இல்லை.

உயிருக்குஅடுத்தபடியாகஒரு மனிதன்இன்னொருவருக்குஅளிக்கக்கூடியஒப்பற்ற பரிசுநம்பிக்கைதான்!

கடைசியில் எல்லாம்சரியாகும் என்று நம்புங்கள் சரியாகவில்லை என்றால்இது கடைசி இல்லைஎன நம்புங்கள்.

உன் மீதுஉனக்கே நம்பிக்கைஇல்லை என்றால்கடவுள் நேரில் வந்தாலும்பயனில்லை.

நம்பிக்கை என்பதுவெற்றியோடு வரும்.ஆனால் வெற்றி என்பது

நம்பிக்கை உள்ளவர்களிடம்மட்டுமே வரும்.

உரிமை இல்லாத உறவும் உண்மை இல்லாத அன்பும் நேர்மை இல்லாத நட்பும்நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும்என்றும் நிரந்தரம் இல்லை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News