ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக வணிகவியல் தினம்!

ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக வணிகவியல் தினம்

Update: 2024-08-10 12:45 GMT

உலக வணிகவியல் தினம் | World Business Day

ஜே. கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

குமாரபாளையம் - 638 183, நாமக்கல் மாவட்டம்

இளையோர் சங்கம் - அறிக்கை

நிகழ்வின் தலைப்பு: உலக வணிகவியல் தினம்


நிகழ்விடம்: இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை, வகுப்பறை, ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நிகழ்ச்சி நடைபெற்ற தேதி: ஆகஸ்ட் 5, 2024.

நிகழ்ச்சி நடந்த நேரம்: காலை 11.30மணி, திங்கட்கிழமை.


முன்னிலை: ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புல முதன்மையர் மற்றும் முதல்வர் முன்னிலையில்.

வரவேற்புரை: எஸ்.தமிழ்ச்செல்வி, இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி, வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்வின் சிறப்புரை: "உலகளாவிய வணிக எல்லைகள் மற்றும் வர்த்தகத்தின் எதிர்காலத்தை வழிநடத்துதல்" என்னும் தலைப்பில் முனைவர்.ஜி.மோகன்ராஜ் இணைப்பேராசிரியர் மற்றும் மேலாண்மைத்துறை துறை தலைவர் ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி குமாரபாளையம்,அவர்கள் மாணவ, மாணவியர்களிடையே சிறப்புரையாற்றினார்.


பங்கு பெற்றோர் விவரம்: ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் இருபால் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முக்கியத்துவம்: உலகமயமாக்குதல், வர்த்தகத்தின் எதிர்காலம், இணைய வர்த்தகம் ஆகியவற்றை எவ்வாறு உருவாக்குவது மற்றும் அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது பற்றி மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.

வளர்ச்சி இலக்கு:

இந்நிகழ்வின் வாயிலாக உலகளாவிய வணிகவியல் தினத்தில் எதிர்கால வர்த்தகத்தை எவ்வாறு வழிநடத்துவது என்பது பற்றி மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டனர்.

நன்றியுரை:

நிகழ்ச்சியின் இறுதியில் அ.சத்தியா , இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி நன்றியுரை வழங்கினார்.

Similar News