இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.33 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-01-23 06:45 GMT

பைல் படம்

இந்தியாவில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை உள்ள 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நேற்றைய (22ம் தேதி) தினத்தைக் காட்டிலும் 4,171 பாதிப்புகள் குறைவு.

மேலும் 525 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர். . 2,59,168 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 3,65,60,050 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,89,409 ஆக அதிகரித்துள்ளது. 21,87,205 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News