தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 1779 பேருக்கு கொரோனா, 11 பேர் பலி : சுகாதாரத்துறை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1779 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 11 பேர் பலியாகியுள்ளனர். அதிக பட்சமாக சென்னை மாவட்டத்தில் 664 பேருக்கு தொற்று உறுதியானது. பெரம்பலூரில் நேற்று தொற்று இல்லை.

Update: 2021-03-26 00:15 GMT

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1779 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது இதில் அரியலூர் மாவட்டம் - 9 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் - 162 பேரும், சென்னை மாவட்டம் - 664 பேரும், கோயமுத்தூர் மாவட்டம் - 153 பேரும், கடலூர் மாவட்டம்  - 28 பேரும், தர்மபுரி மாவட்டம் - 4 பேரும்.

திண்டுக்கல் மாவட்டம் - 21 பேரும். ஈரோடு மாவட்டம் -  33 பேரும். கள்ளக்குறிச்சி மாவட்டம் -  2 பேரும். காஞ்சிபுரம் மாவட்டம் -  63 பேரும். கன்னியாகுமரி மாவட்டம்  - 19 பேரும். கரூர் மாவட்டம் - 5 பேரும். கிருஷ்ணகிரி மாவட்டம் - 9 பேரும். மதுரை மாவட்டம் - 43 பேரும்.

நாகப்பட்டினம் மாவட்டம்  - 13 பேரும், நாமக்கல் மாவட்டம் - 16 பேரும் நீலகிரி மாவட்டம்  -14 பேரும். பெரம்பலூர் மாவட்டத்தில் தொற்று எதுவும் இல்லை. புதுக்கோட்டை மாவட்டம் -  8 பேரும். ராமநாதபுரம் மாவட்டம் - 6 பேரும் ராணிப்பேட்டை மாவட்டம் -  16 பேரும்.

சேலம் மாவட்டம் -  45 பேரும் சிவகங்கை மாவட்டம் - 11 பேரும். தென்காசி மாவட்டம்  - 5 பேரும். தஞ்சாவூர் மாவட்டம் -  108 பேரும் தேனி மாவட்டம் - 8 பேரும். திருப்பத்தூர் மாவட்டம்  - 11 பேரும். திருவள்ளூர் மாவட்டம் -  89 பேரும். திருவண்ணாமலை மாவட்டம்  - 14 பேரும். திருவாரூர் மாவட்டம் - 52 பேரும்.

தூத்துக்குடி மாவட்டம் - 13 பேரும். திருநெல்வேலி மாவட்டம் - 14 பேரும். திருப்பூர் மாவட்டம் - 33 பேரும். திருச்சி மாவட்டம் - 34 பேரும். வேலூர் மாவட்டம் - 18 பேரும். விழுப்புரம் மாவட்டம் - 18 பேரும் விருதுநகர் மாவட்டம் - 9 பேரும் என 1779 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நிலை குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,487. மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,87,71,192. கடந்த ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 80,761. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,73,219. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1779.

சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 664. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,27,343 பேர். பெண்கள் 3,45,841 பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர்.

நேற்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1044 பேர். பெண்கள் 735 பேர். நேற்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1027 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,50,091 பேர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 11 பேர் உயிரிழந்தனர். 5 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவஉர்கள்., 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர். ஒருவர் வேறு இடத்தில் இறந்தார். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,641 ஆக உள்ளது.சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 4,218 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News