விழுப்புரம் மாவட்டத்தில் 7ம் தேதி 52 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 15,721 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 14 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 15,370 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 113 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 238 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.