செங்கல்பட்டு மாவட்டத்தில் 7ம் தேதி 390 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 390 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
செங்கல்பட்டு மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 390 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 58,642 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 216 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 55,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளனர், இதுவரை 835 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2,679 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.