மதுரை மாவட்டத்தில் 19ம் தேதி 328 பேருக்கு கொரோனா, இருவர் பலி
மதுரை மாவட்டத்தில் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகியுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
மதுரை மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 328 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 24,891 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 107 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 22,179 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறப்பு. இதுவரை 479 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2233 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.