கோயமுத்தூர் மாவட்டத்தில் 6ம் தேதி 281 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
கோயமுத்தூர் மாவட்டத்தில் 281 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 281 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 60821 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 145 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 57,549 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார், இதுவரை 695 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2,577 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.