காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் தேதி 181 பேருக்கு கொரோனா. இருவர் பலி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகினர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 181 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 31,720 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 64 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 30,360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் பலியாகினர், இதுவரை 467 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 893 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.