நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10ம் தேதி 145 பேருக்கு கொரோனா, இருவர் பலி
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் இறந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 145 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 10011 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 48 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 9.066 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்துள்ளனர் , இதுவரை 148 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 797 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.