தமிழகத்தில் 23ம் தேதி மட்டும் 13,776 பேருக்கு கொரோனா, 78 பேர் இறப்பு : சுகாதாரத்துறை

தமிழகத்தில் 23ம் தேதி மட்டும் 13,766 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 78 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-23 15:30 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 13,776 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,51,487 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 3842 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் 78 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 13,395 ஆக அதிகரித்துள்ளது.

ணூடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,078 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9,43,044 பேர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 95,048 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News