தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் தேதி 102 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
தூத்துக்குடி மாவட்டத்தில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 102 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 16,949 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 14 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,421 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார், இதுவரை 144 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 384 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.