தூத்துக்குடி மாவட்டத்தில் 87 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் ஏராளமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 87 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 ஆயிரத்து 873 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 141 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.