சேலம் மாவட்டத்தில் 348 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் தினசரி கொரோனாவினால் புதிதாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து விபரங்களும் அரசால் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 348 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 ஆயிரத்து 472 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 457 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.