கவுந்தப்பாடி விற்பனை கூடத்தில் 55,620 கிலோ நாட்டுச்சர்க்கரை விற்பனை

கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 55,620 கிலோ நாட்டுச்சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2023-08-27 13:27 GMT

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக வணங்கப்படுவது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில். இக்கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்பு சர்க்கரை எனப்படும் நாட்டுச்சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று நடை பெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,392 மூட்டைகள் நாட்டுச்சர்க்க ரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை முதல் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.2,720-க்கும், அதிகபட்சமாக ரூ.2,750-க்கும் விற்பனையானது.

2-ம் தரம் குறைந்த பட்சமாக ஒரு மூட்டை ரூ.2,600 -க்கும், அதிகபட்ச மாக ரூ.2,620-க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 620 கிலோ எடையிலான 927 நாட்டு ச்சர்க்கரை மூட்டைகள் விற்ப னையாகின. இதன் விற்பனை மதிப்பு ரூ.24 லட்சத்து 58 ஆயிரத்து 780 ஆகும் என விற்பனைக்கூட கண்காணி ப்பாளர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News