/* */

பயறு வகைகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி? வேளாண்மை விஞ்ஞானி தகவல்

பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்பது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம்

HIGHLIGHTS

பயறு வகைகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி? வேளாண்மை விஞ்ஞானி தகவல்
X

கோப்பு படம் 

பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெறுவது தொடர்பாக நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காவிரி டெல்டா விவசாயிகள் உளுந்து மற்றும் பச்சை பயறு போன்ற பயறு வகைப்பயிர்களை, மார்கழி பட்டத்தில் விதைத்துள்ளனர். இதில் வம்பன் 8 மற்றும் ஆடுதுறை 5 என்ற உளுந்து ரகங்களும், கோ 8 என்ற பச்சை பயறு ரகங்களையும் விவசாயிகள் ஆங்காங்கே விதைத்துள்ளனர். தற்போது பயறு வகை பயிர்கள் பூ பூப்பதற்கு முந்தைய பருவத்தை அடைந்திருக்கும்.

இதற்கு இலை வழியாக 2 சதவீத டி.ஏ.பி. உரக்கரைசல் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் டி.ஏ.பி உரத்தை பூ பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். அதில் இருந்து 15 நாட்கள் கழித்து 2-வது முறையாக தெளிக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயறு ஒண்டர் (பயறு அதிசயம்) ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோவை பூ பூக்கும் தருணத்தில் தெளிக்கலாம். அதில் இருந்து 15 நாட்கள் கழித்து 2-வது முறையாகவும் தெளிக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 2 கிலோ பயறு ஒண்டர் உடன் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதனுடன் ஒட்டும் திரவம் சேர்த்து பயன்படுத்த வேண்டும். பயறுவகை பயிர்களில் வறட்சி ஏற்படும் பட்சத்தில் 2 சதவீத பொட்டாசியம் குளோரைடு அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் பொட்டாசியம் குளோரைடு பயன்படுத்தலாம்.

பயறு ஒண்டர் பயன்படுத்தும்போது பூக்கள் உதிர்வது குறைந்து பயிரின் விளைச்சல் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வறட்சியை தாங்கும் தன்மையும் அதிகரிக்கும். மேலும் விவரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணை மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 28 Jan 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  3. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  4. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  8. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  9. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  10. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்