/* */

உலகின் முதல் அணு ஆயுதச் சோதனை அமெரிக்காவால் இதே நாளில் நடத்தப்பட்டது

உலகின் முதல் அணு ஆயுதச் சோதனை அமெரிக்காவால் , 1945 ஆம் ஆண்டு ஜூலை 16 ம் தேதி டிரினிடி என்ற இடத்தில் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

உலகின் முதல் அணு ஆயுதச் சோதனை அமெரிக்காவால் இதே நாளில் நடத்தப்பட்டது
X

உலகின் முதல் அணு ஆயுதச் சோதனை

இருபதாம் நூற்றாண்டில் தொடர்ந்து பல நாடுகள் தாங்கள் உருவாக்கிய அணுவாயுதங்களை சோதித்துள்ளன. இச்சோதனைகள் அணு ஆயுதங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, பல்வேறு சூழல்களில் எவ்வாறு இயங்குகின்றன, கட்டிடங்கள் ஓர் அணுகுண்டு வெடிப்பின்போது எவ்வண்ணம் பாதிப்பிற்குள்ளாகின்றன போன்ற பல தகவல்களைப் பெற உதவுகின்றன. மேலும் நாடுகள் தங்கள் அறிவியல் மற்றும் இராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாகவும் அரசியல் காரணங்களுக்காகவும் நடத்தப்படுகின்றன.

உலகின் முதல் அணுவாயுதச் சோதனை ( USA) அமெரிக்காவால் , 1945 ஆம் ஆண்டில் ஜூலை 16 அன்று டிரினிடி என்ற இடத்தில் 20 டன் எடை உள்ள அணுகுண்டு வெடிப்பின் மூலம் நடத்தப்பட்டது.


இந்த அணுகுண்டின் சோதனையின் தொடர்ச்சியாக அதன் உண்மையான பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனையாகத்தான் அடுத்த மாதமே ஆகஸ்ட் 6 ம் தேதி போரில் தோற்று சரண் அடைவதாக ஜப்பான் தெரிவித்த பிறகும் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் திட்டமிட்டு அணுகுண்டு போடப்பட்டது.

முதல் ஹைட்ரஜன் குண்டு சோதனை அதே அமெரிக்காவால் மார்சல் தீவுகளில் 1952 ஆம் ஆண்டு நவம்பர் 1 நாள் நடத்தப்பட்டது. மிக வலிமையான அணுகுண்டு சோதனை சோவியத் ஒன்றியத்தால் 1961 ம் ஆண்டு அக்டோபர் 30, ம் தேதி அன்று 50 மெகா டன் எடை உள்ள "சார் பாம்பா" எனக் குறிப்பெயரிடப்பட்ட அணுகுண்டு சோதனையாகும்.

1996ஆம் ஆண்டு முழுமையான சோதனைத் தடை உடன்பாடு ஏற்பட்ட பின்னர், இந்நாடுகள் அனைத்து வகை அணுகுண்டுச் சோதனைகளையும் நிறுத்திவிட உறுதிமொழி அளித்துள்ளன. இந்த உடன்பாட்டில் கையெழுத்திடாத இந்தியாவும் பாக்கிஸ்தானும் 1998 ஆம் ஆண்டு தங்கள் அணுகுண்டு சோதனைகளை நடத்தியது.வட கொரியா 2009 ம் ஆண்டு மே 25 ம் தேதி அன்று அணுகுண்டு சோதனையை நடத்தியுள்ளது.


Updated On: 16 July 2021 5:12 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  2. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  3. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  4. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  10. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...