/* */

மீண்டும் அதிபரானால் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி: டிரம்ப் எச்சரிக்கை

மீண்டும் அமெரிக்க அதிபராக வந்தால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுவித்துள்ளார்.

HIGHLIGHTS

மீண்டும் அதிபரானால் இந்திய பொருட்களுக்கு  கூடுதல் வரி:   டிரம்ப் எச்சரிக்கை
X

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

இந்தியாவில் இருந்து தோல் தயாரிப்புகள், மின்னனு பொருட்கள் உள்ளிட்ட இந்திய பொருட்களை அமெரிக்கா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது

சிறப்பு வர்த்தக நாடு என அங்கீகாரம் அளித்து குறைவான வரிகளை இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கிறது. பொதுவாக, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு கூடுதல் வரி விதிக்கும். அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது இந்த விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100 முதல் 200 சதவீதம் வரை அதிகம் வரி வசூலிப்பதாக கூறி இந்திய வரி விதிப்பு முறையை கடுமையாக சாடினார். இருநாடுகளுக்கு இடையே ஏற்றுமதி, இறக்குமதி வரி வேறுபாட்டால் அமெரிக்கா பாதிக்கப்படுகிறது எனக்கூறி சிறப்பு வர்த்தக சலுகைகளை நிறுத்தபோவதாக அச்சுறுத்தினார். இதனால் அப்போது பரபரப்பு கிளம்பியது.

இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பேசிய ட்ரம்ப், இந்தியாவுக்கான தனது பொருளாதார நிலைப்பாடு மாறவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.

அமெரிக்காவின் மதுபானங்கள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், செல்போன்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கான வரிவிதிப்பு குறித்து பேசியா அவர், "பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அமெரிக்க பொருட்களுக்கு நியாயமான வரி விதிக்கப்படுவது இல்லை. நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரிவிதிக்கப்படும்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் "அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதித்தால் நாமும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வரிவிதிக்க வேண்டும். அது பழிவாங்கல் என சொல்லப்பட்டாலும் சரி" என்றார்.

அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கான விவாதங்களை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் பல்வேறு கட்டங்களாக நடந்த இருந்தது. இதில் அதிபர்வேட்பாளர்கள் தங்களது தேர்தல் வாக்குறுதிகள், மக்கள் பிரச்சினைகள், சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து காரசாரமாக விவாதித்து கொள்வர். இதனை டிரம்ப் தவிர்க்கப் போவதாக சமூக வலைளத்தளத்தில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அமெரிக்க மக்களுக்கு நான் எவ்வளவு வெற்றிகரமான அதிபரா இருந்தேன் என தெரியும். மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களுடன் விவாதிப்பது வீண் கூறியுள்ளார்.

Updated On: 24 Aug 2023 7:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்