கருக்கலைப்பு உரிமை பேரணி: அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கருக்கலைப்பு உரிமை பேரணி: அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
X

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வாஷிங்டன் வரை போராட்டங்கள் நடத்தப்பட்டன (நன்றி: பிபிசி)

கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

டெக்சாஸ் மாநிலத்தில் கருக்கலைப்பை கடுமையாக கட்டுப்படுத்தும் ஒரு புதிய சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் கருக்கலைப்பு குறித்த அரசியலமைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்படலாம் என்று அஞ்சுகின்றனர்.

வரவிருக்கும் மாதங்களில், உச்சநீதிமன்றம் ரோ வி வேட் - 1973 இல் நாடு தழுவிய கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய முடிவை ரத்து செய்வதற்கான வழக்கை விசாரிக்க உள்ளது.

வாஷிங்டன் டிசியில், "கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குங்கள்" போன்ற பதாகைகளை வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். பேரணி ஒருசில பேரணி எதிர்பாளர்களால் பாதிக்கப்பட்டது.

நான் கருக்கலைப்பு செய்து கொள்ளவில்லை என்றாலும், அவ்வாறு மேற்கொண்ட பல பெண்கள் உள்ளனர். எங்கள் உடல்நலம் என வரும்போது அரசாங்கமும் ஆண்களும் இது குறித்து எதுவும் கூறவில்லை. பெண்ணின் உரிமையை ஆதரிப்பதற்காகவே வந்துள்ளதாக பேரணியில் கலந்து கொண்ட ஒரு பெண் கூறினார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி