/* */

உக்ரைன் மீது வரும் 16-ந் தேதி ரஷ்யா படையெடுக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா வருகிற 16-ந் தேதி படையெடுக்கும் என அமெரிக்கா எச்சரித்ததையடுத்து, பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டுமக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளன

HIGHLIGHTS

உக்ரைன் மீது வரும் 16-ந் தேதி ரஷ்யா படையெடுக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை
X

மாதிரி படம் 

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன.

இதனால் உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமாா் 1 லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ரஷ்யா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் குற்றம்சாட்டி வருவதை ரஷ்யா மறுத்துள்ளது.

இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், சீனாவில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும். வருகிற 20-ந் தேதிக்கு முன்பாக ரஷியா, உக்ரைன் மீது படையெடுக்கலாம். அந்த வகையில் 16-ந் தேதி ரஷியா தனது படையெடுப்பை தொடங்கும் என தெரிகிறது. ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது இந்த தேதியை அவர்களிடம் அவர் குறிப்பிட்டு கூறினார் என தெரிவித்தனர்.

உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், படையெடுப்பு வான்வழி தாக்குதலோடு தொடங்கலாம் என்பதால், தாமதிக்காமல் உடனடியாக வெளியேறுவது நல்லது என கூறப்பட்டுள்ளது. அதே போல் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை காலி செய்வதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே படையெடுப்பு குறித்து அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பின்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உக்ரைனில் இருக்கும் தங்கள் குடிமக்களை விரைவில் வெளியேறுமாறு வலியுறுத்தி உள்ளன.

இதற்கிடையில் உக்ரைனுக்கான ரஷ்ய தூதர் மற்றும் அங்குள்ள ரஷ்ய தூதரகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று முதல் அங்கிருந்து வெளியேற தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான பதற்றம் உச்சத்தை எட்டி வரும் நிலையில், அச்சுறுத்தலை சமாளிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கு வலு சேர்ப்பதற்காக போலந்து நாட்டின் எல்லைக்கு அமெரிக்கா கூடுதலாக 3 ஆயிரம் படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.

Updated On: 13 Feb 2022 9:46 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...