மலேசியாவில் கடும் வெள்ளம் : 46,000 பேர் பாதிப்பு

மலேசியாவில் கடும் வெள்ளம் : 46,000 பேர் பாதிப்பு
X

மலேசியா நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.

மலேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூன்று ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் இருந்து 46 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 12,487 குடும்பங்கள் 426 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture