Begin typing your search above and press return to search.
இத்தாலியில் ஒரேநாளில் 22,865 பேருக்கு கொரோனா
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,865 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக இத்தாலி சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இத்தாலியில் தற்போது வரை 4,23,807 பேர் லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 20,157 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் உள்ளனர். மேலும் 2,475 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாலியில் 4.9 லட்சத்துக்கும் அதிகமாேனோருக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது . மேலும் இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,865 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.