Begin typing your search above and press return to search.
வேலையில் இருந்து நிறுத்தப்பட்டால் ரூ. 25 லட்சம்
தனியார் நிறுவன ஊழியர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டால் ரூ 25 இலட்சம் வழங்க வேண்டுமென இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் திடீரென வேலையில் இருந்து நிறுத்தப்பட்டால் ரூ.25 இலட்சம் ரூபாய் நஷ்டஈட்டை ஊழியர்களுக்கு செலுத்த வேண்டும் என்கிற புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை இலங்கை தொழில் துறை அதிகாரி நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி கடந்த 19ம்தேதி வெளியிட்டுள்ளார்.கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் நிறுவனங்கள் ஊழியர்கள் பலரை திடீரென நிறுத்தப்பட்டனர். இந்த நிலைமையை கவனத்தில் கொண்ட இலங்கை தொழில் துறை மேற்படி 25 இலட்சம் ரூபாய் ஈடு என்கிற புதுசட்டத்தை அறிவித்துள்ளது.