/* */

தமிழகத்தில் புதுக்கோட்டை உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் புதுக்கோட்டை உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் புதுக்கோட்டை உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
X

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது.இதன் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஹாமூன் புயல் வலுவிழந்து கரையைக் கடந்த நிலையில், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைப் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், திருச்சி, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 28 Oct 2023 5:10 AM GMT

Related News