/* */

தமிழகத்தில் புதுக்கோட்டை உள்பட 7 மாவட்டங்களில் பெய்ய போகிறது கன மழை

தமிழகத்தில் புதுக்கோட்டை உள்பட 7 மாவட்டங்களில் கன மழைபெய்ய போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் புதுக்கோட்டை உள்பட 7 மாவட்டங்களில் பெய்ய போகிறது கன மழை
X

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் வைகை அணை நிரம்பி விட்டது.

இது தவிர ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய ஏழு கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பலத்த மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து அரக்கோணத்தில் உள்ள பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அங்கு மொத்தம் பத்து குழுவினர் உரிய மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 250 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 Nov 2023 10:34 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  5. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  8. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு