/* */

இப்போதே 29.54 டிகிரி செல்சியஸ்: இந்த ஆண்டு வெயில் எப்படி இருக்கும்?

இப்போதே 29.54 டிகிரி செல்சியஸ் வெயில் அளவு பதிவாகி இருப்பதால் இந்த ஆண்டு வெயில் மிக கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

இப்போதே 29.54 டிகிரி செல்சியஸ்: இந்த ஆண்டு வெயில் எப்படி இருக்கும்?
X

இந்தியாவில் இந்த ஆண்டு இப்போதே 29.54 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. ஆதலால் இந்த ஆண்டு வெயில் மிகவும் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் குளிர்காலம் மற்றும் மழைக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு வெயில் காலத்தின் தொடக்கமே மிக கொடூரமாக உள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்கும் குளிர்காலம் ஜனவரி மாதத்தில் மெல்ல முடிவுக்கு வரும். பிப்ரவரி மாத தொடக்கத்திலும் குளிரின் தாக்கம் கொஞ்சம் இருக்கும். படிப்படியாக வெயிலின் அளவு அதிகரிக்க தொடங்கும். எனினும் மே மாதத்தை ஒப்பிடும்போது பிப்ரவரி மாதத்தில் குளிரும் வெயிலும் கலந்த சூழலால் வெயிலின் தாக்கம் மிதமாக இருக்கும். வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். ஆனால் 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 29.54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.


ஒரு சில பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசையும் தொட்டு இருக்கிறது. அதாவது 1877 ஆம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் கடும் வெப்பம் நிலவி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வானிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் வரும் மாதங்களிலும் கடுமையாக எதிரொலிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் மார்ச் மற்றும் மே மாதங்களில் நிலவும் வெப்பநிலையை சமாளிக்க மக்கள் தங்களை தாங்களே தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

இதற்கு முன்பாக 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 29.48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. இந்த ஆண்டு அதனையும் தாண்டி 29.54 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை உயர்ந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பகல் நேரத்தில் வெப்பநிலை 0.63 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. அது போல் இரவிலும் சிறப்பு. 0.4டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2100 ஆம் ஆண்டு வாக்கில் பகலில் 4.7 டிகிரி செல்சியஸ் முதல் 5.5 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை உயரும் என்று ஒரு ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.


இந்த நூற்றாண்டின் இறுதியில் கோடைகாலத்தில் வெப்ப அலைகளின் எண்ணிக்கை மூன்று முதல் நான்கு வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை மையத்தின் ஆய்வுப்படி இந்தியாவில் சில ஆண்டுகளாக சராசரி வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் சராசரி வெப்பநிலை இயல்பை விட சிறப்பு புள்ளி 0.51 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இதற்கு முன்பு 2021 ம் ஆண்டு வெப்பநிலை 0.44 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. 2009இல் வெப்பநிலை இயல்பை விட 0.55 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது 2010 ஆம் ஆண்டு 0.53 டிகிரி செல்சியஸ், 2016 ஆம் ஆண்டு 0. 71 டிகிரி செல்சியஸ், 2017 ஆம் ஆண்டு 0. 71 டிரி செல்சியஸ் என வெப்பநிலை அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது.

உலக வங்கியின் அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் சராசரி வெப்பநிலை ஒன்று முதல் இரண்டு டிகிரி அதிகரிக்கும் என்பதால் இந்தியா ஆபத்தான கட்டத்தில் உள்ளது. புவி வெப்பமடைவது தான் வெப்பநிலை உயர்வுக்கு காரணம். உலக அளவில் அதன் தாக்கம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பனிப்பாறைகள் உருகி வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் பட்சத்தில் மனித குலத்திற்கு அது பெரும் அச்சுறுத்தல் ஆக மாறும்.


பல உயிரினங்கள் அழிந்து போகக்கூடும் பனிக்கட்டிகளில் நண்ணீர் இருப்பதால் அது கடலில் சேரும்போது கடல் நீரின் உப்பு தன்மை குறைய தொடங்கும். இதனால் கடலில் வாழும் உயிரினங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றத்தால் உணவு உற்பத்தியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கான முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On: 5 March 2023 3:03 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  5. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  7. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  8. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  9. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  10. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு