சேலம் கோயில் நிலம் மோசடி, பூசாரி உட்பட இருவர் 3 ஆண்டு சிறை

X
By - Gowtham.s,Sub-Editor |29 April 2025 2:30 PM IST
சேலம் மாவட்ட நீலகுமம்பட்டி அருகிலுள்ள கோயில் நிலத்தை மோசடியாக விற்றதில் பூசாரி உட்பட இருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
கோவில் நில மோசடி வழக்கில் பூசாரி உட்பட இருவருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனைசேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள இடைப்பாடி, கவுண்டம்பட்டியைச் சேர்ந்த ஐயனாரப்பன் கோவிலுக்கு சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தை பங்காளிகள் ஒன்று சேர்ந்து வாங்கி பயன்படுத்த தீர்மானித்திருந்தனர். இந்நிலையில், அந்த நிலத்தை கோவில் பூசாரியான மணி தனது பெயரில் முதலுதவி வாங்கிய பிறகு, அதன் உரிமையை பங்காளிகளுக்கு தெரியாமல் தனது சகோதரர் ஆறுமுகத்தின் பெயருக்கு மாற்றி கிரயம் செய்து மோசடி செய்துள்ளார். இதுகுறித்து பங்காளிகளில் ஒருவரான ஜெயபூபதி 2009ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி இடைப்பாடி போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மணி மற்றும் ஆறுமுகத்தை கைது செய்து, சங்ககிரி இரண்டாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
15 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், நீதிபதி பாபு நேற்று தீர்ப்பளித்து, குற்றவாளிகள் மணி மற்றும் ஆறுமுகம் இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையுடன், தலா ரூ.2,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu