விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடியில் தொழில்நுட்ப பயிற்சி முகாம்

நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
பனமரத்துப்பட்டி, பாரப்பட்டியில் 'அட்மா' திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரையான தொழில்நுட்ப பயிற்சி நேற்று விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்தப் பயிற்சி நிகழ்ச்சிக்கு வட்டார அட்மா குழுத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பயிற்சியில் வேளாண் உதவி இயக்குநர் சாகுல் அமீத் கலந்துகொண்டு விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டங்களை அரசு மானியத்தில் பெற்று பயன்பெறுவது குறித்து விரிவாக அறிவுறுத்தினார்.
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், நிலக்கடலை பயிரில் நீர் நிர்வாகம் மற்றும் உர மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமான பயிற்சி அளித்தார். அட்மா திட்டத்தின் தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா மற்றும் உதவி மேலாளர் ரேணுகா ஆகியோர் நிலக்கடலையில் ஜிப்சம் இடும் முறை குறித்து செயல்முறை விளக்கத்தைப் பயிற்சியாளர்களுக்கு அளித்தனர்.
இந்தப் பயிற்சியில் மொத்தம் 50 விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu