ரயில்வே பாலத்தில் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு ரயில்வே பாலத்தில் லாரி சிக்கியதால் ஒன்றரை மணி நேர போக்குவரத்து முடக்கம்
ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில், பழுதடைந்த மழைநீர் வடிகால் காரணமாக லாரி சிக்கியதால், இன்று ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காங்கேயத்தில் இருந்து தேங்காய்கள் ஏற்றிச் சென்ற லாரி, மழைநீர் வடிகாலில் சக்கரம் சிக்கி மாட்டிக்கொண்டது. இது, ஏற்கனவே குறுகலாக இருந்த சாலையில், வாகனங்கள் வரிசையாக நிற்கும் நிலையை உருவாக்கியது.
கொல்லம்பாளையம் முதல் காளைமாட்டு சிலை வரை போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகன ஓட்டிகள் பெரும் தவிப்பை சந்தித்தனர். நாடார்மேடு வழியாக வந்த கனரக வாகனங்கள், சாஸ்திரிநகர் மற்றும் சென்னிமலைரோடு வழியே மாற்றி அனுப்பப்பட்டன.
கிரேன் உதவியுடன் லாரி மீட்கப்பட்டதும், போக்குவரத்து வழமைக்கு திரும்பியது. பொதுமக்கள், இந்தப்பாதையில் உள்ள மழைநீர் வடிகால் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu