வெள்ளப்பெருக்கால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து முடக்கம்

சத்தியமங்கலம் அருகே காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு :
சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் வனப்பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழையால், காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடம்பூர், காடகநல்லி, எக்கத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 2 மணிக்கு தொடங்கி, 5 மணி வரை கனமழை பெய்தது.
இதன் விளைவாக, அணைக்கரை அருகே உள்ள மரூர் பள்ளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து கரைபுரண்டோடியது. இதனால், கடம்பூரிலிருந்து கோட்டமாளம் மற்றும் சுஜில்கரை செல்லும் பாதையும், மறுபுறம் கடம்பூர் வழியாக சத்தியமங்கலம் செல்லும் பாதையும் முற்றிலுமாக முடங்கின.
இரு மணிநேரத்துக்கும் மேலாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இரு கரைகளிலும் காத்திருந்து அவதியுற்றனர். மழைநீர் குறைந்த பின்னரே, சுமார் 6 மணியளவில் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. காட்டாற்றில் பருவமழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரை பள்ளம் வழியாக பாலாற்றை சென்றடைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu