சேலம் கொள்ளை சம்பவத்தில் திருப்பூரை சேர்ந்த மூவர் கைது

சேலம் கொள்ளை சம்பவத்தில் திருப்பூரை சேர்ந்த மூவர் கைது
X
கொள்ளை நகைகளுக்கு பணப் பரிமாற்றம் டிடெக்டிவ் ஏஜென்சியுடன் தம்மம்பட்டி திருடர்கள்

திருப்பூரை சேர்ந்த மூன்று நபர்கள் கொள்ளை வழக்கில் சிக்கியுள்ளனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, மண்மலை ஊராட்சி, பாலக்காட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. வேணுகோபால் (75) வீட்டில் கடந்த மார்ச் 29ஆம் தேதி மர்ம நபர்கள் 20 பவுன் நகைகள் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை போலீசார் விசாரணையில் திருப்பூர், கோவையைச் சேர்ந்த தனியார் 'டிடெக்டிவ்' ஏஜன்சி நடத்திய பெண் உட்பட 10 பேரை கைது செய்தனர். மேலும் கொள்ளையர்களுக்கு தகவல் மற்றும் பணப்பரிமாற்றம் செய்த புகாரின் பேரில், திருப்பூர், பல்லடத்தைச் சேர்ந்த நவீன்குமார் (24), அஸ்வின் (24), ராஜ்குமார் (22) ஆகியோரை திருப்பூரில் இருந்து அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் கூற்றுப்படி, இந்த மூன்று நபர்களும் கொள்ளையர்களுக்கு வழித்தடம் காட்டுதல், திருட்டுக்குப் பின் போலீசாரின் நடவடிக்கைகள் குறித்த தகவல் அளித்தல், பணப்பரிமாற்றம், கொள்ளை நகைகளை மாற்றுதல் போன்ற பணிகளை செய்துள்ளனர். இவர்களுக்கு கொள்ளையில் நேரடித் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Tags

Next Story